Breaking News

மாணவன் விபரீத முடிவு - பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

IMG_20250624_181442

பரமன்குறிச்சி அருகே ஆசிரியர் அடித்ததால் பள்ளி மாணவன் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை .. திருச்செந்தூர் வட்டம் பரமன்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ( 15 ) . பரமன்குறிச்சி கே.கே.ஆர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

 பள்ளியில் ஆசிரியர்கள் நேற்று மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது . இதையடுத்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன் தனது பெற்றோரிடம் ஆசிரியர்கள் தன்னை பிரம்பால் அடித்ததாக கூறியுள்ளார் .

 இதனால் பெற்றோர்கள் நாளை பள்ளிக்கு வந்து என்ன என்று விசாரிக்கிறோம் என்று கூறினார்களாம் . இதனால் மனம் உடைந்த மாணவன் என் சாவுக்கு ஆசிரியர்கள் பியூலா , மேரி , வளர்மதி மற்றும் தலைமை ஆசிரியர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று இரவு 8 எட்டு மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவன் விபரீத முடிவெடுத்த சம்பவத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை தன்னுடைய முடிவுக்கு தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்களே காரணமென மாணவர் எழுதிவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது



No comments