Breaking News

MBBS ADMISSION REGARDING:

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர போலி இருப்பிடச் சான்று கொடுத்த கேரள மாணவர்கள்: விசாரணை நடத்த காவல்ஆணையர் உத்தரவு:

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு போலியான இருப்பிடச் சான்று கொடுத்து கேரள மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான கலந்தாய்வை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் என தனித்தனியாக தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்டவெளிமாநிலங்களில் படித்த தமிழக மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

No comments