Breaking News

RE TOTAL RESULT TOMORROW-26.08.2017:

பிளஸ் 2 துணை தேர்வு: நாளை மறுகூட்டல் 'ரிசல்ட்'

சென்னை: பிளஸ் 2 துணை தேர்வு, மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் நாளை(ஆக., 26) வெளியாகின்றன.பிளஸ் 2 துணை தேர்வை, 51 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவு வந்த பின், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு பலர் விண்ணப்பித்தனர்.
அவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியல், scan.tndge.in என்ற, இணையதளத்தில், நாளை வெளியாகிறது. 'மதிப்பெண் மாறாதவர்களின் விபரங்கள், இந்த பட்டியலில் இடம் பெறாது. 'மதிப்பெண் மாற்றம்உள்ளவர்கள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், புதிய மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments