Breaking News

School Morning Prayer Activities - 30.11.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.11.2023

திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள்:310

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.

விளக்கம்:

சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறவிக்கு ஒப்பாவர்.

 


பழமொழி :

Learning is youth is an engraving on a rock.

இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.

இரண்டொழுக்க பண்புகள் :

1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.

2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.

பொன்மொழி :

துருப்பிடித்து தேய்வதை

விட உழைத்து தேய்வது

சிறந்தது.. நீ நினைத்தால்

விண் மீனையும் விழுங்கி

விட முடியும்.. இதுவே உன்

உண்மை பலம்.. மூட

நம்பிக்கைகளை

உதரித் தள்ளிவிட்டு

தைரியமாக செயல்படு

பொது அறிவு :

1. ஆதார் அட்டை முதலில் பெற்றவர் யார்?

விடை:  ரஞ்சனா சோனாவனே

2.. தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர்?

விடை: டீனியா

English words & meanings :

 gut(n) - the elementary canal குடல், நரம்பு. gymnast (n) - expert in gymnastics உடற்பயிற்சி வல்லுநர்

ஆரோக்ய வாழ்வு :

பூசணிப் பூ:பூசணி பூக்களில் ஏராளமான வைட்டமின் A தாது சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்-A கண்பார்வையை மேம்படுத்த உதவும். ஒளியினால் உண்டாகும் மாற்றங்களை சமாளிக்க கண்களுக்கு போதுமான சக்தியை தருகிறது மற்றும் கண்களை ஈரத்தன்மையுடன் வைத்திருக்க கூடியது. அதுமட்டுமல்ல, வைட்டமின்-A இரவு பார்வையையும் மேம்படுத்துகிறது

நவம்பர் 30 இன்று

சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்...

jagadish-chandra-bose-tripinfi

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.

நீதிக்கதை

 பசியால் வருந்திய ஒரு ஓநாய் ஒருநாள் காலையில் ' இரை தேடி கிளம்பியது. காட்டில் கட்டப்பட்டிருந்த ஒரு குடிசையைக் கடக்கும் போது குடிசையிலிருந்த ஒரு தாய் தன் குழந்தையிடம் சொன்ன சொற்களைக் கேட்டது. "அழாமல் இரு.என் சொற்படி கேட்காமல் அழுதாய் என்றால் ஜன்னல் வழியே தூக்கிப் போட்டு விடுவேன். ஓநாய் வந்து உன்னைத் தின்று விடும்." என்று அந்தத் தாய் தன் குழந்தையை மிரட்டிக் கொண்டிருந்தாள். ஓநாய் நாள் முழுவதும் அந்தக் குடிசையின் கதவருகே உட்கார்ந்தே இருந்தது. மாலையும் வந்தது.

இப்போது அந்தத் தாய் குழந்தையிடம் "சமர்த்துப் பிள்ளை, சொன்னதைக் கேட்டாய். ஓநாய் வந்தால் அதைக் கொன்று போடுவோம்." என்று சொன்னதைக்" கேட்டு ஓட்டமெடுத்தது ஓநாய்.

பசியுடனும் குளிருடனும் பொந்தில் முடங்கிக் கொண்டது. "என்ன ஆயிற்று உனக்கு. நீ எப்போதும் இப்படி வந்ததில்லையே. உணவு கிடைக்காமல் களைத்து போய் வந்துள்ளாயே, என்ன விஷயம்?" என்று மற்றொரு ஓநாய் கேட்டது. அதற்கு "ஒரு பெண்ணின் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் வந்த வினை!" என்று அந்த ஓநாய் பதில் சொன்னது.

நீதி : வீண் எதிர்பார்ப்பால் கால இழப்பும், பொருள் இழப்பும் ஏற்படுமே அன்றி காரியம் கை கூடாது.

இன்றைய செய்திகள் - 30.11.2023

*சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

* சீனாவில் சுவாசத் தொற்று எதிரொலி- இந்தியாவில் 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை.

* புழல் ஏரியிலிருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு.

*சுரங்க தொழிலாளர்கள் 41 பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டனர்.

*இந்திய  அணியின் பயிற்சியாளராக தொடர்கிறார் டிராவிட்.

Today's Headlines

*Announcement of the holiday tomorrow for schools in Chennai, Tiruvallur, Chengalpattu, Kanchipuram district.

* Chance of thundershowers in Chennai and suburbs today.

* Respiratory infection reverberates in China- alert for 6 states in India.

* Release of 200 cubic feet of surplus water from Puzhal Lake.

*All 41 miners were rescued unharmed.

* Dravid continues as the coach of the Indian team.

 Prepared by

Covai women ICT_போதிமரம்



No comments