Breaking News

மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடப்புத்தக உருவாக்க பணி: டிச.26-க்குள் விண்ணப்பிக்கலாம் :

புதிய பாடப்புத்தக உரு​வாக்க பணி​யில் பங்​கேற்க விருப்​பம் உள்​ளவர்​கள் டிச.26-க்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு மாநில கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பள்ளி கல்விக்​கான தமிழ்​நாடு மாநிலக் கல்விக் கொள்கை - 2025-ன்​படி மேற்​கொள்​ளப்​பட​வுள்ள புதிய பாடப்புத்தக உரு​வாக்​கப் பணி​களில் தன்​னார்​வத்​துடன் பங்​கேற்க விருப்​பம் உள்​ளவர்​களிடம் இருந்து விருப்ப விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

விண்​ணப்​பிப்​பவர்​கள், தொடர்​புடைய பாடத்​தில் உரிய கல்​வித்​தகுதி பெற்​றிருக்க வேண்​டும். மேலும், கற்​பித்​தல் அனுபவம், மற்​றும் கற்​பித்​தல் அணுகு​முறை​களில் நிபுணத்​து​வம், பாடப்​புத்​தகம், இதர புத்தக உரு​வாக்​கப் பணி​களில் அவர்​களின் பங்​களிப்​பு, சமர்ப்​பிக்​கப்​படும் பாட வரை​வின் மீதான மதிப்​பீடு ஆகியவை ஒருங்கே பரிசீலிக்​கப்​பட்டு தேவைக்​கேற்ப, வல்​லுநர்​கள் இப்​பணிக் ​கெனத் தெரிவு செய்​யப்​படு​வார்​கள்.

தெரிவு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு மட்​டும் அடுத்​தநிலை பணிக்​கான தகவல் தெரிவிக்​கப்​படும். அதைத்​தொடர்ந்​து, மாநிலக் கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி நிறு​வனத்​தால் பாட​வாரி​யாகத் தெரிவிக்​கப்​படும் தலைப்​பு​களில் மாதிரிப் பாட வரை​வை தயார் செய்​து, டிச.26-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும்.

பாட தலைப்பு மற்​றும் மாதிரி விண்​ணப்​பம் உள்​ளிட்ட விவரங்​களை தமிழ்​நாடு மாநில கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி நிறு​வனத்​தின் www.tnschools.gov.in என்ற இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம்.


No comments