Breaking News

அரையாண்டு தேர்வுக்கான வினாத் தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் :

அரை​யாண்​டுத் தேர்வு வினாத்​தாள்​கள் பள்​ளி​களுக்கு நேரடியாக வழங்​கப்​படும் என்று தொடக்​கக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான அரை​யாண்​டுத் தேர்​வு​கள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.

இதற்​கான வினாத்​தாள் தயாரிப்பு பணி​கள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்​களுக்​கான வினாத்​தாளை பதி​விறக்​கம் செய்​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை தொடக்​கக் கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.

அதன் விவரம் வருமாறு: 1 முதல் 5-ம் வகுப்பு வரை​யான வினாத்​தாள்​களை எமிஸ் தளத்​தில் டிச.3-ம் தேதி வரை மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். அதன்​பின்​னர் பள்ளிகளில் குழந்​தைகளின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அவற்றை பிரதி எடுக்க வேண்​டும்.

தொடர்ந்து வினாத்​தாள்​களை வகுப்​பு, பாடம், பயிற்​று மொழி வாரி​யாக பிரித்​து, உறை​யிட்ட கவரில் வைத்து தேர்​வுக்கு 2 நாட்​களுக்கு முன்​பாக வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் வாயி​லாக பள்​ளி​களுக்கு அனுப்​பி வைக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்​கள் அவற்றை பாது​காப்​பாக வைத்​து, தேர்வு நடை​பெறும் நாளில் வினாத்​தாளை எடுத்து பயன்​படுத்த வேண்​டும். இதே​போல், 6 முதல் 8-ம் வகுப்பு வரை​யான மாணவர்​களுக்கு https://exam.tnschools.gov.in என்ற இணை​யதளத்​தில் வினாத்​தாள்​கள் பதிவேற்​றம் செய்​யப்​படும்.

தேர்வு நடை பெறும் நாளுக்கு முந்​தைய தினம் காலை 9 மணி​யில் இருந்து பள்​ளி​கள் நேரடி​யாக வினாத்​தாள்​களை பதி​விறக்​கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்​கப்​படும். வழி​காட்​டு​தல்​களை பின்​பற்றி தேர்வை சிறப்​பாக நடத்தி முடிக்க வேண்​டும்​. இவ்​வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments