சென்னையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை

வாக்குச்சாவடி அமைந்துள்ள 2 பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் அறிவிப்பு.


சென்னையில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள இரண்டு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 வாக்குப்பதிவு மையமான வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை உருது பள்ளிக்கு நாளை விடுமுறை .

சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கார்டன் அரசு தொடக்கப் பள்ளிக்கு  விடுமுறை எனவும் செய்தி வெளியாகி உள்ளன.


நாளை, மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களைத் தவிர பிற இடங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு