Breaking News

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு; 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்:


தமிழகத்தில் உள்ள சென்னை நீதித்துறை மாவட்ட சார்நிலை நீதித்துறை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 33

(i)நகல் பரிசோதகர் (Examiner) - 1;

(ii) முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr) - 4;

(iii)இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) - 7;

(iv) கட்டளை எழுத்தர் (Process Writer) - 3;

(v)ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator) - 18

கல்வித் தகுதி:

அனைத்து பதவிகளுக்கும், எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) உயர்நிலைப் படிப்புகளில் (அல்லது) கல்லூரிப் படிப்புகளில் சேருவதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Xerox Operator பதவிக்கு மட்டும் கூடுதலாக ஜெராக்ஸ் இயந்திரத்தை இயங்குவதில் 6 மாதங்களுக்கு முன்னனுபம் இருக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 22.08.2022

தேர்வுக் கட்டணம்: ரூ. 550

ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி:

இணைய வழி விண்ணப்பங்கள் https://www.mhc.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வின் தன்மை:

பகுதி - I, தமிழ் மொழி தகுதித்தேர்வு - 50 வினாக்கள்

பகுதி - II, பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு - 100 வினாக்கள்

தேர்வு பட்டியல் தயாரித்தல்:

எழுத்துத் தேர்வின் பகுதி I மற்றும் பகுதி II ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற, மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.

இடஒதுக்கீட்டு வீதியைப் பின்பற்றி, தகுதிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவர்.

No comments