Breaking News

மழை பாதிப்பு - 4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 06.12.2023 ) விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு :

சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை ( 06.12.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


' மிக்ஜாம் ' புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் , பள்ளிகள் , தனியார் நிறுவனங்கள் , வங்கிகள் , நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் ( 4.12.2023 ) இன்றும் ( 5.12.2023 ) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.

 நாளை ( 6.12.2023 ) சென்னை , செங்கல்பட்டு , திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது .


No comments