Breaking News

வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழை வெள்ளத்தை அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்... ஒரு கற்பனை

வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழை வெள்ளத்தை
அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்... ஒரு கற்பனை
-------------------------
மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
'போட்'டினில் பின் செல்பவர்
------------------------
வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்சேரியில் வீடு கட்டியோர்
-------------------------
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார் இளைத்தார்
கீழ்போர்ஷனில் குடி இருப்ப்வர்.
-------------------------
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.
ஜலம் உள்ளே வருமாவென !
-------------------------
சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல்மழையால்
மின்சாரம் போயினும் அஃதே !
-------------------------
வெள்ளத்தால் வந்திடும் துயரம் - நல்ல
உள்ளத்தோர் உதவா விடின்
-------------------------
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
-------------------------
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
நாறிடும் பிழைப்பு என்றறி.
------------------------
தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்
தண்ணீரே நுழைந்தது பார்,
-------------------------
ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்
-------------------------
இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்
பொருள்கள் பாழாகும் நிலை

No comments