Breaking News

பண மழையில் நனைய போகும் 4 ராசிகள் யார்?

 


வகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய தொடங்கினால் சுமார் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார்.
சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் ஏனென்றால் நன்மை தீமைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நாம் என்ன செய்கிறோமோ அந்த செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை கொடுப்பது மட்டும்தான் இவரது வேலை. அதனால் இவரை கண்டால் அச்சப்பட தேவையில்லை. சனிபகவான் கொடுக்க தொடங்கிவிட்டால் அதனை யாராலும் தடுக்க முடியாது. அது நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி. அத்தகைய சனிபகவான் வரும் நவம்பர் 4ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் பலராசிகளுக்கு பல பலன்கள் கிடைக்கப் போகின்றது அது எந்த ராசி என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

மேஷம் ராசி: சனிபகவானால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்க போகின்றது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் நல்ல தொடக்கத்தை உங்களுக்கு பெற்று தரும். வரும் காலங்கள் சிறந்த காலமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம் ராசி: சனிபகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் பணமழை பொழியும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும்.

மிதுனம் ராசி: தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. aதனால் எந்தவித பிரச்சனைகளும் இன்றி சந்தோஷமாக இருப்பீர்கள். கடின உழைப்பு நல்ல லாபத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குவீர்கள்.

சிம்மம் ராசி: சனி பகவான் உங்களுக்கு நல்ல யோகங்களை கொடுப்பார்.நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் லாபத்தையும் வெற்றியையும் பெற்றுத் தரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் விலகும். பூர்வீக சொத்து உங்களை தேடி வரும்.

No comments