Breaking News

இந்த கிழங்கு போதும் உங்கள் குடலில் உள்ள கழிவுகள் நீங்கும்! மாதத்தில் ஒரு நாள் சேர்க்கவேண்டும்!


தேவையான பொருட்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

மிளகுத்தூள் - ஓரு சிட்டிகை

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

விளக்கெண்ணெய்

தினமும் நன்றாக மலம் கழித்தாலும், மலம் முழுவதும் வெளியேறாது. அது கொஞ்சம், கொஞ்சமாக சேகரிக்கப்பட்டு குடலில் தங்கிவிடும். அது நாளடைவில் உங்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை கொண்டுவருகிறது.

குறிப்பாக மலச்சிக்கல், உடல் பருமன், சோர்வு ஆகியவை ஏற்படுகிறது. உடல் வலி, கைகால் வலி, மூட்டு வலி என அனைத்து விதமான வலிகளும் ஏற்படுகிறது. எனவே மாதத்தில் ஒருமுறையாவது மலக்குடலை நாம் சுத்தம் செய்யவேண்டியது மிகவும் அவசியம்.

நமது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறினால்தான் நமது உடல் நன்றாக இயங்கும். எனவே ஒவ்வொரு பாகத்திலும் தேங்கும் நச்சை அவ்வப்போது நீக்கிவிடுவது நமது ஆரோக்கியம் மற்றும் சீரான உடல் இயக்கத்துக்கு நல்லது. அந்த வகையில் குடலில் உள்ள நச்சை நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இதற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கும், வீட்டில் உள்ள பொருட்களும் போதும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை அரிதாகவே நமது வீடுகளில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு. குறிப்பாக குடலை சுத்தம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்க்கரை வள்ளிகிழங்கை நன்றாக அலசிவிட்டு, தோல் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் விளக்கெண்ணெய், மிளகுதூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் லேசாக தண்ணீர் தெளித்துக்கொள்ள வேண்டும்.

இதை ஒரு குக்கரில் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெந்தவுடன் எடுத்து நன்றாக மசித்து காலை வெறும் வயிறு அல்லது இரவு உறங்கச்செல்வதற்கு முன் இதை சாப்பிடவேண்டும். காலையில் சாப்பிடும்போது, பல் துலக்கியபின், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் அருத்திவிட்டு எடுத்துக்கொள்ளலாம். 6 வயது முதல் உள்ளவர்களுக்கு அரை ஸ்பூன் போதுமானது. பெரியவர்களுக்கு 3 ஸ்பூன் தேவையானது.

இதை எடுத்தால் முழு வயிறும் சுத்தமாகும். இரவு சாப்பிட்டுவிட்டு படுத்தாலும், காலையில் சாப்பிட்டாலும் வயிறை நன்றாக சுத்தப்படுத்திவிடும். வெறும் வயிற்றில் சாப்பிடும்போது மிகவும் நல்லது. நமது வயிறை மாதத்தில் ஒருமுறையாவது இயற்கை முறையில் சுத்தம் செய்வது நல்லது.

நமது வயிறை மாதம் ஒருமுறை இதுபோல் சுத்தம் செய்தால் உடலில் எவ்வித வியாதிகளும் வராது.

No comments