Breaking News

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் காலி பணியிடங்கள். விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..


ரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் தகுதி உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

'அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, நாளை முதல் https://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இப்பதவிக்கு நாளை மதியம் 01.00 மணி முதல் 18.09.2023 மதியம் 01.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நியமனம் தொடர்பான அனைத்து விபரங்களும் https://www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்றும், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு (Practical) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவலை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.' என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments