Breaking News

இராமநாதபுரம் மாவட்டம் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் திடீர் உத்தரவு!

 

மிழகத்தில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள் , திருவிழாக்கள் அடிப்படையில் உள்ளூர் விடுமுறைகளும் விடப்படுவதுண்டு.

இந்த விடுமுறைக்கான உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிக்கின்றனர். அந்த வகையில் நாளை செப்டம்பர் 11ம் தேதி புதன்கிழமை இமானுவேல் சேகரன் நினைவு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று செப்டம்பர் 9ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திலும் நாளை (செப்.11) பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் " சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு குருபூஜையை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செப்டம்பர் 21 ம் தேதி பணி நாளாக செயல்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments