Breaking News

இந்த பொங்கல் பண்டிகைக்கு கருப்பட்டி பொங்கல் செய்யலாம் வாங்க..

கருப்பட்டி பொங்கல்
தேவையான பொருட்கள் :

கருப்பட்டி தூள் - 1 கப்
பச்சரிசி - 1 கப்
பால் - 3 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - அரை கப்
சுக்குத்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
உலர் திராட்சை - தேவைக்கு

செய்முறை :

அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.

மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

அடுத்து அதில் சுக்குத்தூள் சேர்க்கவும்.

எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.

குறிப்பு  :

* கருப்பட்டி சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

* நெய் அதிகம் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

No comments