10, 11, 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு... தமிழக அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும். அதேபோல், மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வும் நடைபெறும். கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். தற்போது ஆண்டு இறுதி தேர்வான பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் பொதுத் தேர்வு மார்ச் 3 தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 9ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 21ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் பொதுத் தேர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறைக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பணிகளை கவனிக்க 35 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், இயக்குனர்கள், இணை
இயக்குனர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு
கண்காணிக்கும் அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு
பிறப்பித்துள்ளது.
No comments