12 லட்சம் வரை ஜீரோ வருமான வரி.. இப்போ சொந்த வீடு வாங்கலாமா.. இல்ல வாடகை வீட்டிலேயே இருக்கலாமா..?
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் எந்தவித வரியும் செலுத்த வேண்டிய தேவையில்லை என்ற ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
எனவே ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் நபர்களின்
கைகளில் கணிசமான தொகை இருக்கும். எனவே இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த
கட்டமாக புதிதாக வீடு வாங்க வேண்டும் என்ற திட்டத்தை நோக்கி செல்வார்கள்.
இதனால் இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்கள் புதிதாக வீடு வாங்கும் போக்கு
அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் புதிதாக வீடு வாங்க வேண்டும் என திட்டமிடுபவர்கள்
எப்படி அந்த முடிவினை எடுக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள்
தெரிவிக்கும் கருத்துக்களை பார்க்கலாம்.
ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை
என்று அறிவிப்பின் மூலம் பலன் பெறக்கூடிய நபர்கள் உடனடியாக சொந்த வீடு
வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் இறங்கி விடக்கூடாது என நிபுணர்கள்
கூறுகின்றனர்.
முதல் கட்டமாக இவர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வரி சேமிப்பு
தொகையில் 50 சதவீதம் தொகையை எதிர்காலத்தில் சொத்து வாங்குவதற்கான டவுன்
பேமெண்ட் செலுத்துவதற்காக ஒரு நிதியை உருவாக்கி சேமித்து வர வேண்டும்
என்கின்றனர். மீதமுள்ள 30 சதவீதம் தொகையை அவசரகால நிதிக்காக சேமித்து வர
வேண்டும் என்கின்றனர். 20 சதவீத தொகையை லிக்விடு ஃபண்டுகளில் முதலீடு செய்ய
வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.
No comments