செல்வமகள் சேமிப்பு திட்டம்.. எதிர்பார்க்காத அறிவிப்பு வருது? இனிதான் ரொம்ப கவனமாக இருக்கணும்.. நோட்!
செல்வமகள் சேமிப்பு திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா 
திட்டத்திற்கான வரி மீண்டும் குறைக்கப்பட உள்ளதாம். மார்ச் 31ம் தேதி புதிய
 வரி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள
 ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாகக் கடந்த பிப்ரவரி 7ம் தேதி ரிசர்வ் 
வங்கி அறிவித்தது. ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள், அதாவது 6.5 
சதவீதத்தில் இருந்து 6.25%ஆகக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
இதன் மூலம் மற்ற வங்கிகளும் ஹோம் லோன் விகிதத்தை குறைக்கும் சூழல் உள்ளது.
 
ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் 
செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று 
அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு 
வட்டியை நிர்ணயம் செய்யும்.
இந்த விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல் கட்ட வேண்டிய தொகை உயரும். 
ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும்
 உயரும். உதாரணமாக நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள். 20 
வருடங்களுக்கு இஎம்ஐ காட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதல் ஆகும். 
இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் வங்கிகள் இஎம்ஐ 
செலுத்தும் காலத்தை உயர்த்தும். உதாரணமாக இஎம்ஐ 35 ஆயிரமாக உயரும் அல்லது 
இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகள் கூட ஆகும். இது வெறும் உதாரணம்தான்.
ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் 
செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று 
அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு 
வட்டியை நிர்ணயம் செய்யும்.
இந்த விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல் கட்ட வேண்டிய தொகை உயரும். 
ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும்
 உயரும். உதாரணமாக நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள். 20 
வருடங்களுக்கு இஎம்ஐ காட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதல் ஆகும். 
இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் வங்கிகள் இஎம்ஐ 
செலுத்தும் காலத்தை உயர்த்தும். உதாரணமாக இஎம்ஐ 35 ஆயிரமாக உயரும் அல்லது 
இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகள் கூட ஆகும். இது வெறும் உதாரணம்தான்.
 
 பொதுவாக ஒவ்வொரு காலாண்டிற்கும் சேமிப்பு திட்டங்களின் வட்டி 
விகிதங்கள் மாற்றப்படும். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து இந்த வட்டி
 விகிதங்கள் மாற்றப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த செப்டம்பர் 
காலாண்டுக்கும் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்குமா என்று 
எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வருகின்றன செப்டம்பர் காலாண்டுக்கும் வட்டி விகிதங்களில் எந்த 
மாற்றமும் இல்லை. எப்போதும் போல சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வமகள் 
சேமிப்புத் திட்டம்) திட்டத்துக்கு 8.2% வட்டி வழங்கப்படும். இதுதான் 
மத்திய அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டிகளில் 
அதிகபட்சமாக வழங்கப்படும் வட்டி ஆகும் .
வட்டி இல்லை: ஆனால் இதில் வட்டி மாற்றப்படவில்லை என்றாலும் கூட மத்திய அரசு
 தொடங்கி வைத்த ஒரு சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க 
வாய்ப்பு உள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் 
செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காக 
இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ 
தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு 
வந்துள்ளது. அதில் ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு 
திட்டம் ஆகும். பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு 
ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் நிறைய லாபம் வட்டி மூலம் கிடைப்பதால் பெற்றோர்கள் பலரும் 
இதை விரும்புகின்றனர். இதனால் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து
 வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 
11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
எப்படி சேமிப்பது?: 10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள்,
 பாதுகாவலர்கள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். பெண் குழந்தைகள் வயது 10ஐ 
கடந்ததும் அவர்கள் பெயருக்கு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும். 15 
ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு 
பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் 
ரூபாய் முதலீடும் செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவிகிதம் 
வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் நீங்கள் 2 ஆயிரம் ரூபாயை 15 ஆண்டுகள் 
முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11.16 லட்சம் 
ரூபாய் கிடைக்கும்.
திட்டத்தின் வேறு அம்சங்கள்: இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை 1000 
ரூபாய் ஆகும். அருகில் இருக்கும் அஞ்சல் அல்லது வங்கிகளில் இந்த தொகையை 
செலுத்தி கணக்கை தொடங்க முடியும். பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தை 
செலுத்த முடியம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை மாதம் வைப்பு தொகையாக செலுத்த 
முடியும்.
ஆண் குழந்தைகள் திட்டம்: இதற்கு இணையான ஒரு திட்டம் ஆண் குழந்தைகளுக்காக 
உள்ளது. அது National Savings Certificate (NSC) திட்டம். அதாவது தேசிய 
சேமிப்பு சான்றிதழ் திட்டம். தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மூலம் 2 
லட்சம் ரூபாய் வருவாய் எப்படி ஈட்டலாம் என்று பார்க்கலாம்.
இது அரசாங்கத்தால் வழங்கப்படும் குறைந்த ஆபத்துள்ள நிலையான வருமான 
திட்டமாகும், மேலும் இது இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் 
கிடைக்கிறது. ஆண் குழந்தைகளுக்கான இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டம் உங்கள் 
குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் சிறந்த அம்சங்கள் மற்றும் பலன்களுடன்
 உருவாக்கப்பட்டு உள்ளது.
இது சிறந்த வருவாயை உருவாக்க நிலையான வருமானம் மற்றும் உத்தரவாதமான 
வருமானத் திட்டத்தை எளிதாக்குகிறது. இந்த திட்டம் தற்போது ஆண்டுக்கு 7.7% 
வட்டி விகிதத்தில் கிடைக்கிறது.

 
 
No comments