அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், PF உறுப்பினர்களுக்கு மார்சில் மெகா குட் நியூஸ்:
7th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மார்ச் மாதம் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் இரண்டு குறிப்பிடத்தக்க சலுகைகளைப் பெறக்கூடும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சமீபத்தில் சம்பள வகுப்பினருக்கு மத்திய அரசு பெரிய பரிசை வழங்கியது. இந்த மாதம் 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரி விலக்கு வருமானத்தின் வரம்பு 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய உயர்வு
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும்போதெல்லாம் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் (Dearness Relief) அதிகரிக்கும். அந்த வகையில் மார்ச் மாதம் ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வட்டி
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை தவிர, இபிஎஃப் சந்தாதாரர்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது. மார்ச் மாதம் 2024-25 நிதியாண்டிற்கான PF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை அரசு உயர்த்தக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Dearness Allowance: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
மோடி அரசாங்கம் ஹோலிக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் நிவாரணத்தை 3% உயர்த்தக்கூடும் என்று கூறப்படுகின்றது. அப்படி நடந்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவை 56% ஆக அதிகரிக்கும். இந்த மாற்றம் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ் செய்யப்படும். இந்த ஏற்றம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும்.
EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதம்
கூடுதலாக, 2024-25 நிதியாண்டிற்கான PF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அரசு இப்போது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து விவாதிக்க பிப்ரவரி 28 ஆம் தேதி ஒரு முக்கியமான கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
DA Hike: ஆண்டுக்கு 2 முறை டிஏ உயர்வு
மத்திய அரசு வழக்கமாக, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அரையாண்டு தரவுகளின் அடிப்படையில், அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களை ஆண்டுக்கு இரண்டு முறை மதிப்பாய்வு செய்கிறது. இந்த மாற்றங்கள் வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் அமலுக்கு வருகின்றன. பொதுவாக, இவற்றுக்கான அறிவிப்புகள் மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிவருகின்றன.
AICPI Index: ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள்
ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான AICPI குறியீட்டுத் தரவுகளின் அடிப்படையில், ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயரும். ஜூலை முதல் நவம்பர் வரையிலான புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, AICPI குறியீடு 144.5 ஐ எட்டியுள்ளது, டிஏ ஸ்கோர் 55.05% ஆக உள்ளது. இது அகவிலைப்படியில் 3% உத்தரவாதமான அதிகரிப்பைக் குறிக்கிறது. புதிய விகிதங்கள் ஹோலி பண்டிகையையொட்டி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
DA Arrears: டிஏ அரியர்
அகவிலைப்படி ஊயர்வு ஜனவரி 2025 இல் நடைமுறைக்கு வரும் என்பதால், ஊழியர்களுக்கு ஜனவரி முதல், அதாவது இரண்டு மாத டிஏ நிலுவைத் தொகையும் கிடைக்கும்.
அகவிலைப்படி 3% உயர்ந்தால், குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.540 அதிகரிக்கும், ரூ.2,50,000 சம்பாதிக்கும் உயர் பதவியில் உள்ளவர்களுக்கு கூடுதலாக ரூ.7,500 கிடைக்கும். ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பயனடைவார்கள், அவர்களின் ஓய்வூதியம் ரூ.270 அதிகரித்து ரூ.3,750 ஐ எட்ட வாய்ப்புள்ளது.
No comments