Breaking News

மார்ச் மாத பள்ளி விடுமுறை நாட்கள் : 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு; 1-9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது?


தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. முதலில் 12-ம் வகுப்பிற்கு மார்ச் 3-ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து, 11-ம் வகுப்பிற்கு மார்ச் 5-ம் தேதியும், 10-ம் வகுப்பிற்கு 28-ம் தேதியும் பொதுத் தேர்வு தொடக்க உள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு வரும் ஏப்ரல் நடைபெறும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில், மார்ச் மாதத்தில் பள்ளிகள் விடுமுறை நாட்கள் எத்தனை என்பதை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம். 

தமிழ்நாட்டில் மார்ச் மாதம் 10, 11 மற்றும் 12- ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி நடைபெறுகிறது. முதலில் 12-ம் வகுப்பிற்கு மார்ச் 3-ம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து, மார்ச் 5-ம் தேதி 11-ம் வகுப்பிற்கு தேர்வு தொடங்கும். பொதுத் தேர்வை எதிர்கொள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். தேர்வை முறையாக நடத்த அரசு தேர்வுகள் இயக்ககம் முழு வீச்சியில் தயாராகி வருகிறது. பொதுத் தேர்வு நடைபெறுவதால், 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி நேரங்களில் மாற்றம் ஏற்படலாம். இந்நிலையில், மார்ச் மாதத்தில் பள்ளிகள் எத்தனை நாட்கள் செயல்படும், விடுமுறை நாட்கள் என்னென்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.

தமிழக அரசு பொது விடுமுறை நாட்களில் மார்ச் மாதம் 2 விடுமுறைகள் வருகிறது. மார்ச் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெலுங்கு வருட பிறப்பு மற்றும் மார்ச் 31-ம் தேதி (திட்கள்கிழமை) ரமலான் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்கள் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை நாட்கள் ஆகும். இவையில்லாமல் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை ஆகும்.  

மார்ச் 4-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையுனூர் அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, அய்யா வைகுண்டர் 193வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்திற்கு பதிலாக மார்ச் 15-ம் தேதி வேலை நாள் ஆகும். 

அரசு தேர்வுகள், பள்ளி இறுதி ஆண்டு தேர்வுகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடை விழாவினை முன்னிட்டு மார்ச் 11-ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு, தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

பொதுத் தேர்வு நடைபெறும் மாணவர்களுக்கு தவிர இதர வகுப்புகளுக்கு வழக்கம் போல் பள்ளி நாட்காட்டி அடிப்படையில் வகுப்புகள் நடைபெறும். மார்ச் மாதம் மொத்தம் வேலை நாட்கள் 21 ஆகும். 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழக்கம்போல் வகுப்புகள் நடைபெறும். பொதுத் தேர்வு நடைபெறும் காரணத்தினால் பள்ளி நேரங்களில் மாற்றம் ஏற்படலாம்.  

12-ம் வகுப்பிற்கு மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதே போன்று, 11-ம் வகுப்பிற்கு மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரையும், 10-வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 15- வரையும் பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாட்கள் தொடங்கும். 2024-25 கல்வி ஆண்டிற்கு ஏப்ரல் 30-ம் தேதி இறுதி வேலை நாள் ஆகும். 

No comments