Breaking News

அமைச்சரவைக் கூட்டத்தில் விடியல் கிடைக்குமா? பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை!

 


பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வேண்டுகோள் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, பட்ஜெட்டில் இம்முறை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் காத்துள்ளனர்.

தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வியில் 3700 பேர், ஓவியத்தில் 3700, கணினி 2 ஆயிரம் பேர், தையல் 1700 பேர், இசை 300 பேர், தோட்டக்கலை 20 பேர், கட்டிக்கலை 60 பேர், வாழ்வியல்திறன் 200 பேர் என மொத்தம் 12 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.

2011-2012ஆம் கல்வி ஆண்டில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 13 ஆண்டுகளில் 5 ஆயிரம் பேர் பணியிடம் காலியாக உள்ளது. 14 ஆண்டு தற்காலிகப் பணியை, நிரந்தரப் படுத்த வேண்டும். 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை கைவிட்டு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதி நேர ஆசிரியர்களிடம் நேரில் பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் அளித்ததை நிறைவேற்ற வேண்டும். பத்து ஆண்டுக்கு மேல் தற்காலிக பணி செய்தால் நிரந்தரம் என்ற 153 வது வாக்குறுதியும் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் பகுதி நேர ஆசிரியர்களிடம் நேரில் பேசி திமுக ஆட்சிக்கு வந்து 100 நாளில் பணி நிரந்தரம் செய்கிறேன் என உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது. இப்போது நான்கு ஆண்டே முடியப் போகிறது. ஆனாலும் பணி நிரந்தரம் செய்யவில்லை. மேலும் 181ஆவது வாக்குறுதியிலும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

இதை நம்பி 12 ஆயிரம் குடும்பங்கள் காத்துள்ளோம். தற்போது வழங்கப்படுகின்ற குறைந்த சம்பளத்தை வைத்து கொண்டு இன்றைய விலைவாசியில் குடும்ப செலவை செய்ய முடிய வில்லை. இதனால் கடன், வட்டி என அல்லல்படுகின்றோம். 2012ஆம் ஆண்டில் வேலைக்கு சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் தற்போது 14 ஆண்டாக இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம். இனிமேலாவது காலமுறை சம்பளம் வழங்கி ஒரு கவுரவமான வாழ்க்கையை அமைக்க முதல்வர்தான் வழிகாட்ட வேண்டும்.

வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யு வேண்டும் எனவும், வருகின்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடியல் கொடுக்க வேண்டும் முதல்வரே என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments