Breaking News

1-9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் :

.com/img/a/
 

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கடந்த செப்டம்பர் மாதம் முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் நடுநிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.  மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆல்-பாஸ் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.  10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


No comments