Breaking News

அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டவுடன் 50,000 , 60,000 வாங்கும் அவர்களுக்கு இன்னும் சம்பள உயர்வா...? எனத் துடித்து எழும் நம் தோழர்களுக்கும் பொது மக்களுக்கும்.. இந்த பதிவு:


அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு
கேட்டவுடன்
50,000 , 60,000 வாங்கும்
அவர்களுக்கு
இன்னும் சம்பள உயர்வா...?
எனத் துடித்து எழும் நம்
தோழர்களுக்கும்
பொது மக்களுக்கும்.. இந்த
பதிவு.🙏🏼

உங்களுக்கு தெரியுமா?
இந்த 50,000 அவர்கள் எப்படி
வாங்கினார்கள் என்று????

*ஆண்டாண்டு காலமாக இப்படி
அழுது உண்ணாவிரதம் இருந்து
சிறைக்கு சென்று ! .
வேலை நீக்கம் அடைந்து என படிப்படியாக ஆயிரம் ஐநூறு என
சிறுக சிறுக வந்ததுதான் இன்று
உங்கள் கண்களுக்கு விரியும்
50,000 ஆனது!

சரி உங்கள் பக்கத்து வீட்டிலோ
தெருவிலோ ஒரு பண்ணை
வீடு ! லக்சுரி கார் !
விலையுயர்ந்த எலக்ட்ரானிக்
பொருட்கள் என மிக ஆடம்பரமாக
இருப்பவர்கள் யார் என பாருங்கள்,
அரசியல் வாதியோ
தொழிலதிபரோ,
வியாபாரிகளோவாகத்தான்
இருப்பார்கள்....
ஆசிரியரோ ...அரசு ஊழியரோ,
வங்கி ஊழியரோ,அரசு மருத்துவரோ, கிளார்க்கோ
இருக்க மாட்டார் ...!

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம்
அரசு ஊழியர்கள் வருமான
வரியை
பிடித்து கொண்டுதான்
மீதியை சம்பளமாக
அரசு கொடுக்கும் !
பாதிக்கும் மேல் வரியாகப்
போய்விடும்.
சிலருக்கு அந்த மாதம் சம்பளமே
வராது..
அதிகாரிகள் சிலர்
கையிலிருந்து
பணம் போட்டு வருமானவரி
செலுத்துவார்கள்..
இலட்சக் கணக்கில் சம்பாதிக்கும்
சுய தொழில் செய்பவர்கள்,
வியாபாரிகள்,
வீடுகட்டி வாடகைக்கு விட்டு
ஆண்டுதோறும் இலட்சக்
கணக்கில்
சம்பாதிக்கும் உங்கள் உறவினர்கள்
அல்லது நண்பர்கள் அல்லது நீங்கள்
யாரும்
அரசுக்கு முறையாக வருமான
வரி கட்டுவதில்லை....!

ஆனால் அரசு ஊழியர்கள்தான்
இந்த நாட்டில் முறையாக வரி
கட்டுபவர்கள்...
அவர்களுக்கு எவ்வளவு
கொடுத்தாலும்
அதில் பாதி மீண்டும் அரசுக்கே
வரியாகத்தான்
திரும்பவும் போகும்.

அரசு ஊழியர்கள் கேட்கும்
ஆயிரம் ஐநூறு
ஊதிய உயர்வு உங்கள்
பாக்கெட்டுகளில் இருந்து
பிடுங்குவது போல கோபமாக
எதிர்க்கும் நீங்கள்..கோடி
கணக்கில் நம் வரிப்பணத்தில்
கொள்ளையடிக்கும் அரசையோ ,
வியாபாரிகளையோ,
அரசு காண்ட்ராக்டர்களையோ
ஏன் எதற்கு என கேட்க
முடியாது!

30 ஆண்டுகள் பணி செய்தும் கூட
ஒரு சொந்த வீடு கூட வாங்க
முடியாமல்
பணியிலிருந்து ஓய்வு
பெறுபவர்களைப் பற்றி
உங்களுக்குத் தெரியுமா..?

இந்த அரசு ஊழியர்களை
வீட்டுக்கு அனுப்பி விடுவோம்
உங்களில் வேலை இல்லாத
நண்பருக்கு அந்த வேலையை
தருவோம்! யாராவது அரசுக்கு
உதவ தயாரா?

*சம்பளம் கேட்காத, உயர்வு
கேட்காத, விடுமுறை கேட்காத,
லோன் கேட்காத, அந்த நல்லவர்கள்
யார் யார்??*

*அது சரி நாங்கள் வேலை
இல்லாமல் இருக்கோம்
இவர்களுக்கு சம்பள உயர்வா என
கேட்கும் சகோதரர்கள் அரசு
வேலைக்கான தரம் அறியும்
தேர்வில் ஏன் வெற்றி
பெறவில்லை???

இன்று இவர்கள் ஸ்ட்ரைக்
செய்தால் நம்ம தினசரி
வாழ்க்கை பாதிக்கும் என
நினைக்கும் நாம் அரசு
நடத்தவேண்டிய பஞ்சாயத்து
தேர்தலை நடத்தி ஊருக்கு ஒரு
தலைவரை போடலைன்னு
கொதிக்கலையே ஏன்?
பல தொகுதியில் MLA இல்லையே
அதனால் அந்த தொகுதி நல்லது
கெட்டது எடுத்து சொல்லி
கேட்டு உதவி பெற MLA
வேண்டும்னு கதறலயே ஏன்?

*ஒக்கி புயல்,கஜா புயல்  புயல்னு
வந்தா நாமெல்லாம் டிவியில
பார்த்து உச்ச கொட்டும் போது
*மழையில் மின் கம்பத்தில்
உட்கார்ந்து கொண்டு
இறங்கிவந்து உணவருந்த
நேரமின்றி கம்பியில் அமர்ந்து
உணவருந்தும் மின் ஊழியரை
பாராட்டினோம்.

ஆனால் ஊதிய உயர்வுன்னதும்
நம்ம பீரோவில யாரோ கை விட்டார்போல துடிக்கிறோமே
எப்படி????

கல் குவாரியை தோண்டும்
போது* *இரவாகி விட்டதால்
அங்கேயே படுத்து
கொண்டிருந்த அரசு
அதிகாரியை பாராட்டினோமே...
இப்ப அவர் ஊதிய உயர்வு
கேட்டதும் எரிகிறோமே அது ஏன்?*

*பொண்டாட்டி பிள்ளையை
சென்னைல விட்டுட்டு போலீஸ்
அதிகாரி எவன் வீட்டு
நகையையோ பணத்தையோ மீட்க
மொழி தெரியாத வட
இந்தியாவில் சுடப்பட்டு
*இறந்தபோது அய்யோ பாவம்
என்றோமே!
அவரின் சக ஊழியர் ஆயிரம்
ரூபாய் உயர்வு கேட்டதும் நம்
அப்பா எழுதி வைத்த சொத்து
பத்திரத்தை பிடுங்கியது போல
பதறுகிறோமே ஏன்?

ஒரு ஆக்ஸிடென்ட் கொலை
என்றதும் பார்த்துவிட்டு
பரிதாபப்பட்டு வீட்டில போய்
படுத்துக் கொள்வோம், ஆனால்
*அந்த இடத்திலேயே அன்றைய
இரவைக் கழிக்கும் காவலர்
ஆகட்டும் தாசில்தார் மருத்துவ
ஊழியர்கள் சாலை பணியாளர்
போன்ற அனைவரும் அரசு
ஊழியர்கள் என்பதை நாம் ஏன்
சிந்திக்க மறுக்கிறோம்!

12 மாதங்களில் ஒரு மாதம் பள்ளி
விடுமுறை விடுகிறார்கள்
அந்த ஒரு மாதம் கூட நாம் நம்
குழந்தைகளை வீட்டில் வைத்துக்
கொள்ளாமல் எங்காவது
ஊருக்கு அனுப்பலாமா
*விடுமுறை பள்ளியில்
சேர்க்கலாமா என்று
யோசிக்கிறோம்..
அந்தப் பதினொரு மாதங்கள் இந்த
குழந்தைகளுக்காக *வேலை
செய்யும் அந்த ஆசிரியர்களை
பற்றி நாம் என்றாவது
சிந்தித்திருக்கிறோமா??
அவர்கள் ஊதிய உயர்வு கேட்டதும்
நம் வீட்டில் பாதியை
பிரித்துக்கொடுக்க கேட்டது
போல் துடிக்கிறோமே ஏன்?

இன்று நமது மாநில *அரசும்
மத்திய அரசும் உலக வங்கி அந்த
வங்கி இந்த வங்கிகளிடம் கடன்
வாங்கி நாட்டின் கடன் எத்தனை
ஆயிரம் கோடி என்று
கூறுகிறார்களே அதில்
எத்தனை ஆயிரம் கோடியை இந்த
அரசு ஊழியர்களிடம் கொடுத்து
விட்டார்கள்* *என்று என்றாவது
நீங்கள் கேட்டதுண்டா?

அதனால் நாம் அவர்களுக்கு
உதவி செய்ய தேவை இல்லை.
அவசியமின்றி அவர்களை
உதாசீனப்படுத்த வேண்டாம்.
கோபப்பட வேண்டாம்..
அவர்கள் உரிமை அவர்கள்
கேட்கிறார்கள்
நம் *குடும்பத்திலும் யாரோ
ஒரு அரசு ஊழியர் இருப்பார்,
இல்லை நாளை வருவார்
என்பதை மனதில் வைத்து நீங்கள்
உங்கள் வேலையை
செய்யுங்கள் ! அவர்கள் அவர்கள்
வேலையை பார்க்கட்டும்.🙏🏼

படித்ததில் பிடித்தது....
உங்களுக்கும் பிடித்திருந்தால்
பகிருங்கள்....

No comments