Breaking News

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

தற்போது இந்த கொரோனா  காலகட்டத்தில் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்பு எடுத்து மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்தோம் ஆனால் கேள்வித்தாளின் கடினத்தன்மை மற்றும் மாணவர்களுக்கு பாடங்களை முழுமையாக படிக்க போதிய நேரம் இல்லாமை ஆகிய காரணங்களால் மாணவர்கள் சரிவர தேர்வு எழுத முடியாததை அறிகிறோம்

எனவே தற்போது நடைபெற உள்ள விடைத்தாள் திருத்தும் பணியை  அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்க வேண்டாம் நாம் புறக்கணித்தால் விடைத்தாள் திருத்தும் பணி தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படும் அவ்வாறு சூழ்நிலை ஏற்பட்டால் அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்   

எனவே ஆண்டு முழுவதும் உழைத்த உங்கள் உழைப்பு வீண் போகாமல் இருக்க குறைந்தபட்சம் 5 நாட்கள் நடைபெற உள்ளது விடைத்தாள் திருத்தும் பணியை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்காமல் மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

அரசு பள்ளி ஆசிரியர்

தமிழ்நாடு முழுவதும் இந்த செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும் எனவே உங்கள் மாவட்டத்திற்கு இந்த செய்தி வந்தவுடன் உங்கள் மாவட்டத்தின் பெயரை இதற்கு கீழே பதிவிடவும்

1. விழுப்புரம் மாவட்டம்
2. காஞ்சிபுரம் மாவட்டம்

No comments