Breaking News

தேர்வில் மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தால்....

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு மே 5-ம் தேதி தொடங்குகிறது. அது போல் மே 6 முதல்10-ம் வகுப்புகளுக்கும் மே 10-ம் தேதி 11-ம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில், மாணவர்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தேர்வு எழுதினாலும், முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவித்திருந்தது. மேலும், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் பறக்கும்படை அதிகாரிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட இதர தொடர்பு சாதனங்களை வைத்திருக்க கூடாது. அப்படி வைத்திருப்பது கண்டறியப்பட்டதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என பள்ளி தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது

மேலும் தேர்வில் மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தால் பருவத்தேர்வு ரத்து செய்யப்படுவதோடு தேர்வெழுத நிரந்தர தடை விதிக்கப்படும், தேர்வில் காப்பி அடித்தால் மாணவரின் தேர்வை ரத்து செய்வதோடு ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் உள்ளிட்ட தேர்வு அறைகளில் நடக்கும் 15 வகையான குற்றங்களின் தன்மைகள், அதற்கான தண்டனை அளவு உள்ளிட்டவைகளையும் பள்ளி தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

No comments