Breaking News

பள்ளி கல்வி நேரத்தை மாற்றி அமைக்க மத்திய கல்வி வாரியம் வலியுறுத்தல்:

புதுடில்லி:நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகல்வி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும். நாடு முழுவதம் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு துவங்கி மதியத்திற்குள் முடிக்கலாம். பள்ளிகளில் நடத்தப்படும் காலை நேர வழிபாட்டை நிழல் உள்ள பகுதிகளில் நடத்த வேண்டும்.


latest tamil news


கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் வெளி விளையாட்டுக்களை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும். பள்ளி வாகனங்களில் அதிகஅளவிலான மாணவர்களை ஏற்ற கூடாது. முதலுதவி பெட்டி அவசியமாக வைத்திருக்க வேண்டும். என இவ்வாறு அவை வலியுறுத்தி உள்ளது.

No comments