Breaking News

வரும் ஜூலையில் உயர்கிறது அகவிலைப்படி.. வெளியானது தகவல்..!

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டும் ஜனவரி மாதம் அகவிலைப்படி வழங்குவது நிறுத்தப்பட்டது.

2021-ம் ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 17 சதவீதம் மற்றும் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 2022 மார்ச்சில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதற்காக 9,544 கோடி ரூபாய் செலவாகும் என்றும், இதன் மூலம் 46.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.63 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவர் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மார்ச்சில் சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் 6.95 சதவீதமாக அதிகரித்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக உயர்த்தப்படலாம் என கருதப்படுகிறது.

அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டால், 56,900 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 21,622 ரூபாயாக உயரும்.

No comments