Breaking News

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று தீர்ப்பு:

 


வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

புதுடெல்லி,

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு அரசாணையிலும் வெளியிடப்பட்டது.

இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அவசரம் கருதி தினந்தோறும் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டி இருப்பதால் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டின் மதுரை  கிளைக்கு மாற்றப்பட்டது.

அதன்படி சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு தினந்தோறும் விசாரணை நடைபெற்றது. அப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 % உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதன்படி சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளான ராகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பினை இன்று வழங்க உள்ளது.

No comments