Breaking News

பீர் பாட்டிலால் தலைமை ஆசிரியரை குத்த முயன்ற பிளஸ் 2 மாணவன் - வைரலாகும் வீடியோ:

 

சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அருகே மஞ்சினி  கிராமத்தில்  உள்ள  அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த  26ம் தேதி  12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தலையில் முடி  வெட்டாமல் பின்புறம்  கொண்டை போல் வைத்துக்கொண்டு பள்ளிக்கு  வந்துள்ளான். இதனை கண்ட  தலைமை ஆசிரியர் அந்த மாணவனை தனது  அறைக்கு அழைத்துச் சென்று இது போல் பள்ளிக்கு வரக்கூடாது என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தலைமை ஆசிரியருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், நாற்காலி மீதிருந்த பொருட்களை  கீழே தள்ளி உடைத்துள்ளான். இதனால் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு  அங்கு வந்த ஆசிரியர்கள், மாணவனை சமாதானப்படுத்தினார்கள் . இது குறித்து தகவலறிந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்,  பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து  மாணவனிடம் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரும்படி  கூறியுள்ளனர்.

அதன்படி மாணவன் தனது பெற்றோரை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளான். பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தலைமை  ஆசிரியர் தெரிவித்தார். அப்போது மாணவன் தனது பையில் இருந்து, காலி பீர் பாட்டிலை எடுத்து உடைத்ததுடன், ‘என்னை மட்டும் தான்  குறி வைத்து இப்படி கேட்கிறீர்கள்’ என கூறியபடி தலைமை  ஆசிரியரை பாட்டிலால் குத்த முயன்றுள்ளான். உடனடியாக சுதாரித்த சக ஆசிரியர்கள் மாணவனை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

No comments