Breaking News

குரு உதயம், இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இன்று முதல் பிரகாசிக்கும்.

< p style="text-align: justify;">

ஜோதிடத்தின் படி, ஒன்பது கிரகங்களில் தேவகுரு வியாழன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர்களது திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  பொதுவாக குரு பகவான் அறிவு, கல்வி, மதம், குழந்தைகள், மூத்த சகோதரர் போன்றவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார். 

குரு

பகவான் பிப்ரவரி 24 அன்று அஸ்தமனமானார். மார்ச் 26 , அதாவது நாளை அவர் மீண்டும் உதயமாகிறார். வியாழன் கிரகத்தின் உதயம் மாலை 06.38 மணிக்கு நிகழும். ஒரு கிரகம் அஸ்தமனமானால், அதன் பலன் குறையத் தொடங்குகிறது. வியாழன் கிரகத்தின் அஸ்தமனம் 12 ராசிகளையும் பாதிக்கிறது. ஒரு கிரகம் உதயமாகும் போது, ​​மக்களின் தலைவிதி மாறத் தொடங்கும். அதன்படி அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் உதயத்தால் லாபம் உண்டாகும். இதனுடன் பொருளாதாரப் பக்கமும் வலுவாக இருக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மூத்த சகோதர சகோதரிகளால் பணப் பலன்கள் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். இது தவிர வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடும் வாய்ப்பு அமையும்.

மிதுனம்: வியாழனின் உதயம் வேலை மற்றும் வியாபாரத்திற்கு மிகவும் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில், மனைவியுடன் உறவு இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள்.

துலாம்: குருவின் உதயத்தால் வேலையில் வெற்றி உண்டாகும். இதனுடன், திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும். தினசரி வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் உதயம் உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் வீட்டில் நடக்கப்போகிறது. இந்த காலத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். லாபம் காண பல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

No comments