Breaking News

ஆதார்-பான் எண் இணைக்க இன்று கடைசி நாள் - வருமான வரித்துறை எச்சரிக்கை

ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

சென்னை,

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு அவ்வபோது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் ஆதாருடன், பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த காலக்கெடுவுக்குள் அதனை ஆதார் கார்டுடன் இணைக்காவிட்டால், அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. மேலும் ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண், செயல்படாத எண்ணாக அறிவிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயம் என்றும், அதன் பின்னர் முதல் 3 மாதத்திற்குள் பான் எண்ணை இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து அபராத தொகை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments