Breaking News

நீங்கள் ஜாதகத்தை நம்புபவார்களா ? இந்த பதிவு உங்களுக்கானது -சுக்ரனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஓஹோன்னு இருக்கும். எந்த ராசிக்காரர்கள் வாங்க படிக்கலாம்

சுக்ரனின் ராசி மாற்றம்: ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் மக்களின் நல்வாழ்வுக்கான கிரகமாக கருதப்படுகிறார்.

சுக்கிரன் கிரகம் தனது ராசியை மாற்றி வேறு ராசிக்குள் நுழையும் போதெல்லாம் லட்சுமி தேவியின் சிறப்பு அருள் பல ராசிகளின் மீது பொழிந்து அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பது நம்பிக்கை.

சுக்கிரன் பிப்ரவரி 27 ஆம் தேதியன்று மகர ராசியில் நுழைந்துள்ளார். மார்ச் 31 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். அவருடைய இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. குறிப்பாக பல ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் அதிர்ஷ்ட அலை அடிக்கும்.

பொருள் ரீதியான இன்பம், செழுமை, புகழ், கலை, திறமை, அழகு, காதல், நிம்மதி உள்ளிட்ட பல இன்பங்களை இவர்கள் பெறப் போகிறார்கள். சுக்ரனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை ஜொலிக்கப்போகிறது என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்

கடகம்: சுக்கிரன் கிரகத்தால் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். பணச்சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். கடக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணிகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியதில்லை.

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்

ரிஷபம்: ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும். கௌரவம், பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். பண வரவும் லாபமும் கிடைக்கும். இதன் காரணமாக உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும்.

ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்

மேஷம்: குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்திற்கு இது மிகவும் உன்னதமான நேரமாக இருக்கும். செய்யும் பணிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். மேஷ ராசிக்காரர்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சமய மற்றும் ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள்.

No comments