Breaking News

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 28.08.2024


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:621

இடுக்கண் வருங்கால் நகுக; அதனை

அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.

பொருள்: துன்பம் வரும்போது (அதற்காக்க் கலங்காமல்) நகுதல் வேண்டும்.அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதைப்போன்றது வேறு இல்லை.

பழமொழி :

Many hands make work light.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

இரண்டொழுக்க பண்புகள் : 

*கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன்.

 * எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்கான திறவுகோல். நீங்கள் செய்வதை நேசித்தால், நீங்கள் வெற்றியடைவீர்கள்." - ஆல்பர்ட் ஸ்விட்சர்

பொது அறிவு :

1. ஈஸ்ட் என்பது ஒரு______

விடை: பூஞ்சை

 2. தேனீக்கள் வளர்க்கும் முறை______

விடை : ஏபிகல்சர்

English words & meanings :

 amiable-நட்பு,

  affable-நட்புணர்வுள்ள

வேளாண்மையும் வாழ்வும் :

முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.

நீதிக்கதை

 ஆணவத்தின் முடிவு.

ஒரு காலத்தில் வடக்கிலிருந்து வீசும் வாடைக் காற்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வருடத்துக் குளிர் காலம் நீண்டதாகவும் அதிக குளிருடனும் இருந்ததால் வாடைக்காற்று மிக கர்வம் அடைந்தது. ‘உலகம் முழுவதையும் என்னால் கடும் குளிரில் உறைய வைக்க முடிந்தது. பூமியிலேயே மிகவும் வலிமை வாய்ந்த சக்தியாக நான் விளங்குகிறேன். என்னை விட வலிமையானவர் யாரும் இல்லை, என்று காற்று, அதிகமாக பெருமைப்பட்டுக் கொண்டது.

அதிக நேரமாக இதனுடைய பேச்சை கேட்ட பிறகு சூரியனுக்கு அலுத்துவிட்டது. மேகங்களுக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்த சூரியன், வாடைக்காற்றை கூப்பிட்டது. “வலிமையும் பலமும் பொருந்திய இயற்கை சக்தியான நீ இவ்வாறு பெருமைப்பட்டுக் கொள்வது நல்லதன்று. நம் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலை உண்டு,” என்று சூரியன் கூறியது.

வாடைக்காற்று மிக மிக அதிகமாக தன் வலிமையை நினைத்து கர்வப்பட்டு,

“என்னளவு பலம் உனக்கு இல்லாததால், நீ இவ்வாறு என்னிடம் சொல்கிறாய். இந்த பூமியில் எதை வேண்டுமானாலும் சாதிக்க என்னால் முடியும்,” என்று மிக அலட்சியமாக பதில் கூறியது வாடைக்காற்று.

இதை கேட்டதும் சூரியனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது

” உனக்கு ரொம்ப வலிமை இருப்பதாகவும் இந்த பூமியில் உன்னால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், உன்னால் சிலவற்றை தான் செய்ய முடியும்,” என்று சூரியன் சொன்னது.

இதை கேட்டு சிரித்த காற்று, “என்னால் செய்ய முடியாதது என்ற ஒரு விஷயத்தை நீ கூறு, பார்க்கலாம்,” என்று சவால்விட்டது.

சூரியன் கீழே குனிந்து பார்த்தது. பூமியில் ஒரு மனிதன் சாலையில் போய்க்கொண்டிருந்தான். மிகவும் குளிராக இருந்ததால் அவன் தன்  மேலங்கியை கழட்டி தன்னை சுற்றி இறுக்கி போர்திக் கொண்டான்.

சூரியனுக்கு ஓர் எண்ணம் உதித்தது, வாடைக்காற்றிடம் சொல்லிற்று, “கீழே சாலையில் நடந்து செல்லும் அந்த மனிதனைப் பார். அங்கு நீ மிகவும்  குளிர்ச்சியாக செய்திருப்பதால் அவன் தன்னுடைய மேலங்கியை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கிறான். உன்னுடைய வலிமையை நீ உபயோகி; மேலங்கியை அவன் எடுத்து விட்டால் நீ தான் மிகவும் வலிமையானவன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றது.

இது மிகவும் எளிமையான பணி என்று வாடைக்காற்று எண்ணியதால் சவாலை ஏற்றுக் கொண்டது. காற்று வேகமாக வீசிற்று. சாலையில் அந்த மனிதன் இருந்த இடத்தில் இன்னும் அதிகவேகமாக வீசிற்று. மேலங்கியை அவன் கழற்றவில்லை.

 குளிர் தாங்காமல் அந்த மனிதன் தன் மேலங்கியை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டான். வாடைக் காற்றால் சவாலில் வெற்றி பெற முடியவில்லை. சூரியனை முயற்சி செய்யுமாறு காற்று கேட்டுக் கொண்டது.

சூரியன் மிகவும் பிரகாசமாக வெளிவந்தது, திடீரென்று வெப்பமாக இருப்பதை உணர்ந்த அந்த மனிதன், “என்ன வேடிக்கை! சற்று முன் கடுங்குளிராக இருந்தது; இப்போது வெப்பமாக இருக்கிறதே,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். சூரியன் மேலும் வெப்பத்தை அதிகரித்தது.

சகிக்க முடியாத வெப்பத்தால் தன் மேலங்கியை கழற்றினான்;

இவற்றையெல்லாம் பார்த்த காற்று  தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. அதன் பிறகு  வாடைக்காற்று கர்வத்தை விட்டொழித்து,தன்னுடைய கடமையை தவறாமல் செய்து வந்தது.

 நீதி : தற்பெருமை அவமானத்தை ஏற்படுத்தும்.

இன்றைய செய்திகள் - 28.08.2024

* கூட்டுறவு சங்கங்களின் சேவைகளை சேவைகளை அறிய 'கூட்டுறவு’ என்ற செயலி சேவையை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

* இளைய தலைமுறையினரிடம் நடக்கும் பழக்கம் குறைந்து வருவதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘விறு விறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்’ குறித்தசெயல் திட்டத்தை தமிழக பொது சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.

* பொதுமக்களுக்கு பெரும் சுமையாகும் சுங்க கட்டணத்தை உயர்த்தக் கூடாது: அரசியல் தலைவர்கள், வணிகர் சங்கம் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

* ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யுபிஎஸ்) மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்புகள் வலியுறுத்திய நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை ஏற்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

* விடியவிடிய தாக்குதல் நடத்திய ரஷ்யா: ஏவுகணை, ட்ரோன் தாக்குதலால் நிலைகுலைந்த உக்ரைன்.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லோரென்சோ முசெட்டியும், பெண்கள் ஒற்றையர் பிரிவில்  சபலென்காவும்

அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* மகளிர் டி20 உலகக்கோப்பை: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.

Today's Headlines

* Minister K.R. Periyakarupan inaugurates 'Cooperative' mobile app to know the services of cooperative societies.

* Tamilnadu public health department launches a project to raise awareness about the 20  benefits of regular walking among the younger generation.

* Central government was urged not to increase customs duty, which is a burden on the general public insisted by political leaders and trade associations.

*  Maharashtra government has announced that it will be the first state in the country to implement the Unified Pension Scheme (UPS) as the Unions of Central Government Employees have urged the state governments to implement the scheme.

 * Russia launches massive attack: Ukraine has been destabilized by missile and drone strikes."

 * US Open Tennis: Lorenzo Musetti and Sabalenka advance to the next round in men's and women's singles respectively.

*  Women's T20 World Cup: India   announced the team headed by Harmanpreet Kaur.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments