Breaking News

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் அறிவிப்பு!

 


ன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா கோயில் திருவிழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் பொதுவிடுமுறை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழா காலங்களில் உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவதுண்டு. இந்த விடுமுறைக்கான உத்தரவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிக்கின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இன்று ஆகஸ்ட் 5ம் தேதி திங்கட்கிழமை திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமவாசிகள் கலந்து கொள்வர் .

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இந்த திருவிழாவை உள்ளூர் மக்களும் கலந்து கொள்ள வசதியாக இன்றூ தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

No comments