Breaking News

TNPSC Group 4 Exam Results: தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய அப்டேட்

 


TNPSC Group 4 Exam: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் Group-4 பதவிகளுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. இத்தேர்வினை 1389738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதினர். 

2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் தேர்வு எழுதியவர்கள் பகிர்ந்து கொண்டதை பார்க்கலாம்.
என் பேரு முத்துசாமி, நான் மூணு வருஷமா தேர்வு எழுதிட்டு வர்றேன். குரூப் 4 எக்ஸாம் பொறுத்தவரைக்கும் மொத்தம் 200 மார்க் கேள்விகள் கேட்கப்படும். அதுல ‌100 மார்க் தமிழ் பாடத்திலையும், கணித பாடத்தில் 25 மதிப்பெண்ணும், பொது அறிவில் 75 மதிப்பெண்ணும் கேட்கப்படும். கடந்த ஒரு ரெண்டு மூணு வருஷமா தமிழ்நாடோட வளர்ச்சி நிர்வாக முறைகளை பத்தி அதிகமா கேள்விகள் கேக்குறாங்க.

இந்த வருட தேர்வில் கூட தமிழக அரசு சமீபத்தில வெளியிட்ட பொருளாதார ஆய்வு அறிக்கைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. நாங்க எதிர்பார்த்தது பொது அறிவு தான் எங்களோட கட் ஆப் மார்க் குறைக்க போகுது நினைச்சோம். ஆனா அதற்கு நேர் மாறா நடந்திருக்கு. இந்த முறை தமிழ்ல கேள்விகள் கொஞ்சம் கஷ்டமா கேட்டு இருக்காங்க. குரூப் 2வ விட குரூப் 4 தமிழ்ல கேள்விகள் கடினமா இருக்குது.

கணக்கு பாடத்துல கேள்விகள் கஷ்டமாவும், இருந்தது ஈசியாவும் இருந்துச்சு கலவையா இருந்ததுன்னு சொல்லலாம். மத்தபடி பொது அறிவு ஒரு அளவுக்கு யூகிக்கிற அளவுல தான் இருந்தது. தமிழ்ல கேள்விகள் கடினமா இருந்ததால இந்த முறை கட் ஆஃப் மார்க் குறைவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதற்கு முந்தைய தேர்வுகளில் எல்லாம் நேரடியான கேள்விகள் கேட்கப்படும் ஆனால் தற்போது நிறைய ஸ்டேட்மெண்ட் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதாவது ஏ,பி,சி,ஆப்ஷன் அந்த மாதிரி இல்லாமல். எந்தக் கூற்று சரி போன்ற பதில்கள் கொஞ்சம் குழப்பமடையும் வகையில் கேட்கப்படுகிறது. இது ஒரு விதத்தில் நல்லது என்றாலும் ஏற்கனவே நீண்ட ஆண்டுகளாக படித்தவர்களுக்குத் தான் இது எளிமையானதாக இருக்கும். எனவே நாம் படிக்கும் போதே நல்ல தெளிவாக ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.

இந்நிலையில், தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இதற்கான முடிவுகள் இன்னும் 3 மாதங்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார் 

No comments