Breaking News

10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இந்திய ரயில்வேயில் வேலை : உடனே அப்ளை பண்ணுங்க!

எந்தவித தேர்வுமின்றி பிட்டர், வெல்டர், பிளம்பர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொழிற் பழகுனர்களை பணியமர்த்துவது தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தென்கிழக்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

 Indian Railway Jobs: இந்த ஆள்சேர்க்கை மூலம் 772 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


காலியிடங்கள் விவரம்


10ம் வகுப்பு அல்லது சமமான கல்வியில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்


இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 06.06.2023 அன்று 24க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.


சம்பளம்: அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும். ஆன்லைன் மூலமாக 07.07.2023 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம் secr.indianrailways.gov.in


ரயில்வே நிறுவனங்களில் பழகுனர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு , குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், மருத்துவ தரத்துக்கு உட்பட்டு, பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.



No comments