Breaking News

2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை - பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி - ஜனவரி 8 விண்ணப்பிக்க கடைசி நாள் .

பாரதியார் பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி , பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை, கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
கவர்னர் மாளிகை அறிக்கை:
பாரதியாரின் 139வது பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்த, கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார் .

 *பள்ளி மாணவர்கள் '

இந்திய விடுதலை போரில் மகாகவி பாரதியாரின் பங்கு' என்ற தலைப்பில், 2,000 முதல் 2,500 வார்த்தைகளுக்கு

மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.

 தமிழில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch 2021tamil@gmail.com
 என்ற இ - மெயில் முகவரிக்கும்;

 ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch 2021eng@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

 *கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்கள்

' பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம் '*

என்ற தலைப்பில், 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.

 தமிழில் எழுதும் மாணவர்கள், mahakavibharaticol 2021tamil@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கும்,

 ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள் mahakavi bharaticol2021engl@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்

. கட்டுரைகள், ஜனவரி 8 மாலை 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

அதில், மாணவர்கள் தங்கள்பெயர், வீட்டின் முகவரி, கல்வி நிறுவனம், மொபைல் போன் எண் ஆகிய விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

 *முதல் பரிசு 2 லட்சம்

கட்டுரைகளை தேர்வு செய்ய, செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் சந்திரன், தமிழ்நாடு மருத்துவ பல்கலை துணைவேந்தர்சுதா சேஷையன் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


மொத்தம் நான்கு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்

. பள்ளி அளவிலான போட்டியில், முதல் பரிசு பெறுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்;

 கல்லுாரி அளவிலான போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்,*

 ஜனவரி 26ல், ராஜ்பவனில் நடக்கும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments