Breaking News

ரூ. 50,000 வரை சம்பளம்... கொட்டிக் கிடக்கும் அரசு வேலைவாய்ப்பு

 


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தநல்லூர், லால்குடி,மணிகண்டம், மண்ணச்சநல்லூர், மருங்காபுரி, முசிறி, தொட்டியம், திருவெறும்பூா், துறையூா், உப்புலியபுரம், வையம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணியின் தன்மை : அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவி செய்தல் வேண்டும்.

ஊதிய படி நிலை: ரூ. 15700 - ரூ. 50000

வயது வரம்பு: 01. 07.2023 அன்று 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இரண்டு ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

விண்ணப்பப் படிவம்:

வரிசை எண்வட்டார வளர்ச்சி அலுவலகம் பெயர்பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் காலியிடம்
1அந்தநல்லூர்(PDF 2.27 MB)
2லால்குடி(PDF 2.56 MB)
3மணிகண்டம்(PDF 2.30 MB)
4மண்ணச்சநல்லூர்(PDF 2.18 MB)
5மருங்காபுரி(PDF 4.41 MB)
6முசிறி(PDF 2.52 MB)
7தொட்டியம்(PDF 2.63 MB)
8திருவெறும்பூா்(PDF 2.22 MB)
9துறையூா்(PDF 2.77 MB)
10உப்புலியபுரம்(PDF 2.24 MB)
11வையம்பட்டி(PDF 2.46 MB)



அடிப்படைத் தகுதிகள்: 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவத்தினை
tiruchirappalli.nic.in என்ற இணையதளம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மையஇணையதளம் (National Career Service Portal) www.ncs.gov.in ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments