Breaking News

சிம்மத்தில் இணையும் புதன்- சுக்கிரன். இந்த 4 ராசிகளுக்கு திடீர் பண வரவை தரும்..!

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றி மற்ற ராசிகளுக்குள் நுழைகின்றன. இந்த செயல்முறை கிரக மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் தன் நிலையை மாற்றினால், அது நம் வாழ்க்கையையும் பாதிக்கிறது. அது நல்லதாகவும் இருக்கலாம் .கெட்டதாகவும் இருக்கலாம். இதை இன்னும் எளிமையாகச் சொல்வதானால், கிரகத்தின் இந்த ராசி மாற்றம் பல்வேறு ராசிகளில் சுப அல்லது அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.


இந்நிலையில் புதன் சிம்ம ராசியில் 68 நாட்கள் நுழைகிறது. புதனின் இந்த மாற்றத்தின் பலன் 12 ராசிகளிலும் விழுகிறது. ஆனால் இந்த சஞ்சாரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால், சுக்கிரன் ஏற்கனவே சிம்மத்தில் இருக்கிறது. இம்முறை புதனும் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால் புதன் சுக்கிரன் இணைவு உருவாகிறது.


சிம்மத்தில் சுக்கிரனும் புதனும் இணைவது லக்ஷ்மி நாராயண யோகத்தை உருவாக்குகிறது. ஜோதிடத்தில் புதன் நாராயணனின் அடையாளமாகவும், சுக்கிரன் லட்சுமியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், அவர்களின் சங்கமம் லக்ஷ்மி நாராயண யோகாவை உருவாக்குகிறது, இது ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் போது பெரும் செல்வம் சேர வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த யோகம் ஆகஸ்ட் 7 வரைதான் இருக்கும்.


ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 7 வரை சிம்ம ராசியில் சுக்கிரனும் புதனும் இருப்பதாக அயோத்தி ஜோதிடர் பண்டித கல்கி ராம் தெரிவித்துள்ளார். இந்த லக்ஷ்மி-நாராயண யோகத்தின் சுப பலன்கள் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த யோகம் குறிப்பாக 4 ராசியினருக்கு உகந்தது. இந்த நேரத்தில் அவர்கள் அதிகமான பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.


இந்த நான்கு அதிர்ஷ்ட ராசிகள் மேஷம்: லக்ஷ்மி நாராயண யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இந்த நேரத்தில், அவர்களின் ஆசை நிறைவேறும். பணம் மழை பெய்யும். சுக்கிரனும் புதனும் இணைவதால் பணியில் தொடர் வெற்றி உண்டாகும்.


மிதுனம்: லக்ஷ்மி நாராயண யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மத விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணியில் போனஸ் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எங்காவது முதலீடு செய்ய விரும்பினால், இதுவே சரியான நேரம் எனக் கூறலாம்.


துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் புதன் இணைவதால் தொழிலில் வெற்றி கிடைக்கும்.iதனால் பெரிய வேலை கிடைக்கலாம். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். நல்ல விஷயங்கள் அனைத்தையும் சாதித்துக் கொள்ளலாம்.


விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தில் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பணியில் முன்னேற்றம் ஏற்படும். வணிகம் வளர்ச்சி மற்றும் லாபத்திற்கான பெரும் சாத்தியம் உள்ளது. திருமண வாழ்க்கையில் நல்ல இணக்கம் இருக்கும். உடனே யே குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணம் வரவும் அதிகமாகும்.

No comments