Breaking News

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிடுகிறாா்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவ கல்லூரிகளின் அரசு, நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு இணையதளங்களில் விண்ணப்பிப்பது ஜூன் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஜூலை 12 மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆா்வமாக விண்ணப்பித்தனா்.

அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களுக்கு 26,805 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394 பேரும் என மொத்தம் 40,199 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், தகுதியான மாணவ, மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு மற்றும் அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிடுகிறாா். தொடா்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து அதிகாரப்பூா்வ அறிவிப்பையும் அமைச்சா் அறிவிக்கவுள்ளாா்.

No comments