Breaking News

செவ்வாய்-சுக்கிரன் இணைவு இந்த ராசிக்காரர்களை கோடீஸ்வரனாக்கும்...!


ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து நகரக்கூடியவை. ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், கிரக பெயர்ச்சி மற்றும் நட்சத்திர பெயர்ச்சியை வைத்துதான் ஒருவரின் ஜாதகம் என்ன நிலையில் இருக்கிறது என கணிக்கப்படுகிறது.
அதே சமயம், கிரகங்களின் இணைவுகளும் நம் வாழ்வில் ஆழமாக விளைவுகளை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம். செவ்வாய் மற்றும் சுக்கிரன் சிம்மத்தில் பெயர்ச்சியாகிறது. சிம்மத்தில் செவ்வாய்-சுக்கிரன் சேர்க்கை ஜூலை 07 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07, 2023 அன்று வரை இருக்கும். இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் வேலை வாய்ப்பு, பண வரவு, தொழில் லாபம் போன்ற பலன்களை பெறுவார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.


மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் - சுக்கிரன் சேர்க்கை பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு புதிய வீடு, வாகனம் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார ரீதியில் ஆதாயம் உண்டாகும், மேலும் பணத்தை மிச்சப்படுத்துவீர்கள். தாயின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். சொத்து, ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் வாழ்க்கையில் அன்பும் காதலும் அதிகரிக்கும் வியாபாரத்தில் பெரும் பணம் கிடைக்கும்.
மகரம் : இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை சிம்மத்தில் அமர்வதால் ராஜயோகம் உருவாகிறது. இது தவிர மகர ராசிக்கு 11ஆம் இடமான செவ்வாய் அதிபதியாக இருப்பதால் தன யோகம் உருவாகி வருகிறது. உங்கள் வேலையின் முடிவுகளில் தாமதம் இருக்கலாம், ஆனால் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள் ஆனால் சற்று தாமதமாகும். செலவுகளை சரி பார்க்கவும்.
கும்பம் : கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் சுக்கிரன் யுதிகள் நல்ல பலன்களைத் தரும். திடீரென்று பணம் கிடைக்கும், கடனை அடைக்க வசதியாக இருக்கும்.நிதி நிலைமை வலுவடையும், வருமானம் அதிகரிக்கும், வருமான அதிகரிப்பால் பல பிரச்சனைகள் தீரும். வியாபாரம் நன்றாக நடக்கும்.குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன.

No comments