Breaking News

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 2022 - 2023 | குரு பார்க்க கோடி நன்மை- அனைத்து இராசிதாரர்களுக்கும் :

தனுசு

தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர்களே...!

தவறு செய்தால், தலைவனாக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்கமாட்டீர்கள். இதுவரை இரண்டாம் வீட்டிலும், மூன்றாம் வீட்டிலும் அமர்ந்து, உங்களை தெளிவான பாதையில் அழைத்துச் செல்லாமல் திணறடித்த குருபகவான் இப்போது நான்காவது வீட்டுக்குள் நுழைந்து 14.04.2022 முதல் 22.04.2023 வரை நீடிப்பதால் கொஞ்சம் வேலைச்சுமை அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் கூட சண்டையில்தான் போய் முடியும். பிள்ளைகளின் கல்யாண விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். தாயாருக்கு மூட்டுவலி, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வந்து போகும். ஆனாலும் குரு பகவான் உங்கள் சுக ஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று அமர்வதால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பூர்வீகச் சொத்து விஷயங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் உதவியுண்டு. பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. சொத்து வாங்குவது விற்பதில் உஷாராக இருங்கள். உங்களின் 10-ம் வீட்டை குரு பார்ப்பதால் உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும்.
வீண் சந்தேகத்தால் கணவன் - மனைவி பிரிய வேண்டி வரும். சில விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள்.

உயர் கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் அத்துமீறி அவர்களின் விவகாரங்களில் நுழைய வேண்டாம். நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். வாகன விபத்துகள் நிகழக் கூடும். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான சுயரூபத்தை உணருவீர்கள். பணத் தட்டுப்பாடு அவ்வப்போது தொடர்ந்தாலும் ஏதேனும் ஒருவழியில் அவற்றைச் சமாளிப்பீர்கள்.

குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:

14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வெளியூர் பயணங்களால் கையிருப்பு கரையும்.

30.04.2022 முதல் 24.02.2023: மேற்கண்ட நாட்களில் உங்களின் தன, சேவகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பேச்சில் தடுமாற்றம், வீண் விவாதங்கள் வரக் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி நிம்மதியுண்டாகும்.

24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்களின் சப்தம, ஜீவனாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் கணவன் - மனைவிக்குள் இருந்த இடைவெளி நீங்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நாடாளுபவர்களின் சந்திப்பு நிகழும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். வியாபாரிகளே, லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். வரவேண்டிய பாக்கிகளை நாசூக்காக வசூலியுங்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய யுக்திகளை கையாளுங்கள்.

பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போகவும். உத்யோகஸ்தர்களே, பணிச்சுமை வாட்டியெடுக்கும். சக ஊழியர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். மேலதிகாரியிடம் மனஸ்தாபங்கள் அதிகரிக்கும். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் குருபகவான் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். மே மாதங்களில் நிம்மதி கிட்டும். பதவி உயர்வு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். இந்த குரு மாற்றம் அவ்வப்போது உங்களை கசக்கிப் பிழிந்தாலும் வருங்காலத்துக்கு பயனுள்ளதாக அமையும்.

பரிகாரம்: திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரையும், அங்குள்ள ஸ்ரீதட்சிணாமூத்தியையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாரிசு இல்லாத வயதான தம்பதியருக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.

******
மகரம்

உதட்டால் பேசாமல் இதயத்தால் பேசுபவர்களே...!

குலம், கோத்திரம் பார்க்காமல் பாசமுடன் பழகுபவர்களே! எடுத்த வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே! சிறந்த கலா ரசிகர்களே! இதுவரை உங்களின் ராசியிலும், 2-ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகளையும், கவுரவத்தையும், அதே நேரத்தில் அலைக்கழிப்பையும், தர்ம சங்கடத்தையும் கொடுத்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை முதல் ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிப் பெற்று அமர்கிறார். நல்லதே நடக்கும். மனைவியிடம் விட்டுக் கொடுத்து போகவும். உங்களுக்கு வேண்டியவர்களே உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தி பிரிக்க முயல்வார்கள். ஆனால் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் - மனைவிக்குள் அன்பும், அன்யோன்யமும் குறையாது. நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.

குருபகவான் உங்களின் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி தடபுடலாக நடத்தி முடிப்பீர்கள். மகளின் உயர்கல்விக்காக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். தந்தைவழி உறவினர்களிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குருபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் புது முயற்சிகள் வெற்றியடையும். விலை உயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

எந்தச் செயலிலும் அவசரப்படாமல் நீங்கள் கொஞ்சம் நிதானமாகத்தான் செயல்படவேண்டும். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். அநாவசியமாக யாரையும் வீட்டுக்குள் அழைத்து வரவேண்டாம். இளைய சகோதரருடன் அவ்வப்போது உரசல் போக்கு வந்து நீங்கும். நீங்களும் தரவேண்டிய கடனையெல்லாம் தந்து முடிப்பீர்கள். அனைவரிடமும் இணக்கமான போக்கைக் கையாளவும். எதிலும் நிதானம் அவசியம். உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிலும் குறிப்பாக பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். திடீர் பணவரவு உண்டு. மூத்த சகோதரர் உதவுவார். பூர்வீகச் சொத்தை புதுப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும்.

குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:

14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் சேவக, விரயாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட லோன் வசதி கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட வழக்கு சாதகமாக முடியும்.

30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்கள் ராசிநாதனும், தனாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு
பகவான் செல்வதால் எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் பிறக்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவுடன் சில வேலைகளை முடிப்பீர்கள்.

24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்களின் ரோக, பாக்யாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் தந்தையாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். கல்யாணம், காதுகுத்து என வீடு களை கட்டும். குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வியாபாரிகளே, போட்டியாளர்களுக்கு மத்தியில் ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி உங்களின் அணுகுமுறையை மாற்றி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் வசூல் அதிகரிக்கும். கெமிக்கல், ரியல் எஸ்டேட், ஹோட்டல் வகைகளால்லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே, உங்கள் கோப தாபங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். சில சமயங்களில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். ஆனாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு கிடைக்கும். இந்த குரு மாற்றம் கவலைகளை கரைப்பதாகவும், காசுபணம் தருவதாகவும், எங்கும் முதல் வரிசையில் உட்கார வைப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் உள்ள தென்குடித் திட்டையில் வீற்றிருக்கும் பசுபதிநாதரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.

******

கும்பம்

எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே...!

புரட்சிகரமான முடிவும், தொலை நோக்குச் சிந்தனையும் கொண்டவர்களே, மந்திரியாக இருந்தாலும் மனசில் பட்டதை பளிச்சென பேசுபவர்களே. இதுவரை உங்கள் ராசிக்குள் 12-ல் குருவாகவும், ஜென்ம குருவாகவும், அமர்ந்து நல்லதையும், கெட்டதையும் கலந்து கொடுத்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை 2-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்து பலன் தரப் போகிறார். உங்களின் அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். இனி எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். உங்கள் ராசிக்கு 2-ம் வீடான குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப் போய்க்கொண்டிருந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள் வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள்.

குரு பகவான் உங்களின் ஆறாவது வீட்டை பார்ப்பதால் உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குருபகவான் உங்களின் எட்டாவது வீட்டை பார்ப்பதால் வராது என்றிருந்த பணம்கைக்கு வந்து சேரும். குரு உங்களின் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். அரசாங்க காரியங்களில் இருந்த தடுமாற்றம் நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். குலதெய்வம் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகள் வந்ததே! இனி அந்த அவலநிலை மாறும். செரிமானக் கோளாறு, தூக்கமின்மை, கை, கால் வலி, முதுகுவலி என அவஸ்தைப் பட்டீர்களே! இனி எல்லாம் சரியாகும். தேவையில்லாமல் பேசி சில நல்ல நட்புகளையெல்லாம் இழந்தீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பாசமழை பொழிவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. உங்களை கண்டும் காணாமல் போன உறவினர்கள் இனி தேடி வந்து உறவாடுவார்கள்.

குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:

14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் தன, லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். சுபநிகழ்ச்சிகளால் குடும்பத்தில் சந்தோஷம் பொங்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். பழைய சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.

30.04.2022 முதல் 24.02.2023: மேற்கண்ட நாட்களில் உங்களின் ராசிநாதனும், விரயாதி பதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தடைபட்டசில வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள்.

24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் பூர்வ புண்யாதிபதியும், அஷ்டமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் மகளின் கல் யாணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரிகளே, போட்டியாளர்களை சமாளிக்கும் அளவுக்கு புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். மருந்து, கமிஷன், மர வகைகளால் லாபமடைவீர்கள். டிசம்பர், ஜனவரி, மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும்.

உத்யோகஸ்தர்களே, உங்களின் கடின உழைப்பையும், திறமையையும் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்கள் நல்ல பெயர் எடுத்தார்களே! அந்த அவலநிலை மாறும். இனி மேலதிகாரியின் கனிவு பார்வை உங்கள் மீது விழும். உங்களின் சம்பளம் உயரும். இந்த குரு மாற்றம் எங்கும் எதிலும் முன்னேற் றத்தையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவ தாக அமையும்.

பரிகாரம்: விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீவிருத்தகிரிஸ்வரரையும், விபசித்து முனிவர் மற்றும் தட்சிணாமூர்த்தியையும் மூலம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள். சுபிட்சம் உண்டாகும்.

******
மீனம்

மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே...!

தனக்கென எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாதவர்களே! மூட நம்பிக்கைகளில் மூழ்காமல் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டிலும், 12-ம் வீட்டிலும் அமர்ந்து வீண்பழி, விரக்தி, விரயச் செலவு என்று உங்கள் நிம்மதியைக் குலைத்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை ராசிக்குள்ளேயே ஆட்சிப் பெற்று அமர்ந்து ஜென்மகுருவாக நீடிப்பதால் மன உளைச்சல், டென்ஷன், வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்து போகும். அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.

குரு பகவான் 7-ம் வீட்டையும் பார்ப்பதால் கணவன் - மனைவிக்குள் அன்பு குறையாது. சோர்ந்து கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குரு பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும். மகளின் கல்யாணம் தடபுடலாக நடந்து முடியும். வழக்குகள் சாதகமாக அமையும். குலதெய்வம் கோயிலை புதுப்பிப்பீர்கள். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தந்தைவழி பாட்டன் சொத்துகள் வந்து சேரும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

பெரிய முடிவுகள் எடுக்கும்போது உணர்ச்சிவசப்படவேண்டாம். குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகளை எல்லாம் பெரிதாக்க வேண்டாம். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். குறுக்கு வழிகளைத் தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் அவ்வப்போது கருத்துவேறுபாடுகள் நிலவி வந்ததே, இனி பாசமாக பேசுவார்கள். என்றாலும் அவர்களால் கொஞ்சம் செலவுகளும் இருக்கும். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அவரின் உடல்நிலை சீராகும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிட்டும். அக்கம் பக்க வீட்டார்கள் அன்பாக பேசுகிறார்களே என்று குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:

14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் எந்த வேலையையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் கவுரவப் பதவி வரும்.

30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் லாப, விரயாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தடைகள் நீங்கும். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் சுக, சப்தமாதி பதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நண்பர்கள் உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புதன் பாதகாதிபதியாக இருப்பதால் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரிகளே, போட்டியாளர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். அனுபவமில்லாத புதுத் துறையில் கால்பதிக்க வேண்டாம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, கமிஷன், ஷேர் மூலம் லாபமுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது பிரச்சினை செய்தாலும் இறுதியில் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள்.

உத்யோகஸ்தர்களே, மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் மறையும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை கற்றுத் தருவதுடன், அவ்வப்போது வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: சென்னை திருவலிதாயத்தில் (பாடி) அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.

சிம்மம்

நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே!

வசதி வந்தபோதும் பழைய நட்பை மறவாதவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் கடந்த ஓராண்டு காலமாக 6-ம் வீட்டிலும், 7-ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்ததால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறிப் போனீர்களே! பணப்பற்றாக்குறையாலும், சரியான தூக்கமில்லாமலும் தத்தளித்தீர்களே, இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை எட்டாம் வீட்டுக்குள் ஆட்சிப் பெற்று அமர்கிறார். முன்பு போலவே பெயர் கெடுமோ, எந்த வேலையையும் திறம்பட செய்ய முடியாதோ! என வருந்தாதீர்கள். சர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் உபய வீட்டில் மறைவதுடன், தன் சொந்த வீட்டில் அமர்வதால் மேற்கண்ட காலக் கட்டங்களில் கெடு பலன்கள் குறைந்து நற்பலன்களே அதிகரிக்கும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் எல்லாம் இனி முழுமையடையும். வரவேண்டிய பணம் வந்துசேரும். பழைய கடனையும் பைசல் செய்வீர்கள்.

பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். வழக்குகள் சாதகமாகும். உங்கள் ஆலோசனையை அலட்சியப்படுத்தியவர்கள் இப்போது தேடி வருவார்கள். பணம் வரத்தான் செய்கிறது ஆனால் ஏனோ தங்கவில்லை என புலம்பினீர்களே! இனி பணத்தை சேமிக்கும் வழியை கண்டுப்பிடிப்பீர்கள். பழுதான எலட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் சாதனங்களை மாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் நல்ல பதவி கிடைக்கும். கொஞ்சம் மறைமுக எதிர்ப்புகளும் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். விமர்சனங்கள், வதந்திகள் வரும். அதற்காக அஞ்ச வேண்டாம். எதையும் துணிச்சலுடன் எதிர்கொண்டால், எதையும் சாதிக்கலாம்.

குருபகவான் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள், பனிப்போர் நீங்கும். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீங்கள் நல்லதே சொன்னாலும் சிலர் அதை தவறாகப் புரிந்து கொண்டார்களே, சில சமயங்களில் சொல்ல வேண்டிய விஷயத்தை சரியாக சொல்ல முடியாமல் தடுமாறினீர்களே, அந்த அவல நிலையெல்லாம் இனி மாறும். குருபகவான் உங்களின் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் ஆரோக்யம் மேம்படும். மருந்து மாத்திரைகளின் அளவு இனி குறையும். வீண் அலைச்சல், டென்ஷன், களைப்பு, மன உளைச்சல் நீங்கும். தண்ணீர் வசதி யில்லாத, இடவசதியில்லாத வீட்டில் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி விசாலமான வீட்டுக்கு மாறுவீர்கள்.

குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:

14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங் களில் உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான்தன் நட்சத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் உங்களின் தகுதி, அந்தஸ்து உயரும். பதவிகள் தேடி வரும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பெரிய உதவிகள் கிடைத்து, வாழ்க்கையில் முன்னேற வழி கிடைக்கும். பெரிய பிரபலங்களுடன் நட்பு ஏற்படும்.

30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் ரோக சப்தமாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மை, தயக்கம் வரக்கூடும். வாகன விபத்துகள், வீண் செலவுகள், மறைமுக அவமானம், உறவினர், பிரபலங்களுடன் பகையும் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக்கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து பேச வேண்டும். எந்நேரமும் பொறுமை காக்கவும்.

24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் தன லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் முழுமையடையும். குழந்தை பாக்யம் கிட்டும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். ஆன்மிகப் பயணங்கள் செல்ல திட்டமிட்டு, அப்பயணங்களால் நன்மை கிட்டும்.
வியாபாரிகளே, பழைய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க புது திட்டம் தீட்டுவீர்கள். பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்க வேண்டும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். டிசம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இரும்பு, கெமிக்கல், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் பிரச்சினைகள் வெடிக்கும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்யோகஸ்தர்களே, நீங்கள் திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மூத்த அதிகாரி புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவீர்கள். சக ஊழியர்களிடையே வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சக ஊழியர்களை நம்பி மேலதிகாரிகளைப் பற்றி குறை சொல்லாதீர்கள். புது வேலைக்கு மாறும்போது யோசித்து செயல்படுங்கள். அனைவரிடமும் இணக்கமான போக்கைக் கையாண்டால், எளிதில் வெற்றிகளைக் குவிக்கலாம். இந்த குருப்பெயர்ச்சி வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான மன உறுதியைத் தருவதுடன், வி.ஐ.பிகளின் மனதிலும் இடம்பிடிக்க வைக்கும்.

பரிகாரம்: காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருப்புலிவனம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரரையும், ஸ்ரீசிம்ம குரு தட்சிணாமூர்த்தியையும் சித்திரை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வெற்றி உண்டு.

******
கன்னி

வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் மண்ணின் மைந்தர்களே...!

ஆரம்பத்தில் அந்தரத்தில் கோட்டை கட்டும் நீங்கள், பிற்காலத்தில் ஆள்பவர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்கள் சுக ஸ்தானாதி பதியான குருபகவான் கடந்த ஓராண்டு காலமாக 5-ம் வீட்டிலும், 6-ம் வீட்டிலும் மாறிக் கொண்டேயிருந்ததால் கொஞ்சம் கூட ஓய்வெடுக்க முடியாத படி வேலைச்சுமை இருந்ததே! இப்போது குருபகவான் 14.04.2022 முதல் 22.04.2023 வரை ஏழாம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் குழம்பிக் கிடந்த உங்கள் மனம் இனி தெளிவடையும்.. குருபகவான் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் - மனைவி இனி ஒன்று சேருவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. வீட்டை முழுமையாகக் கட்டி முடிப்
பீர்கள். சொத்துப் பிரச்சினை தீரும்.

மூத்த சகோதரி பண உதவி செய்வார். இளைய சகோதரர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். குருபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு,வாகன வசதி பெருகும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். குருபகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் கவுரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் தனி மரியாதை கிடைக்கும். சொந்த ஊர் கோயில் திருவிழாவை முன்னின்று நடந்துவீர்கள்.

குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்: 14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் சுக, சப்தமாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் தடைகள் நீங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த உரசல் போக்கு மாறும். அரசாங்கத்தால் அனுகூலமுண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள்.

30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் பூர்வ புண்ய, ரோகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீட்டில் தள்ளிப் போய்க் கொண்டிருந்த கல்யாணம், காது குத்து போன்ற சுபநிகழ்ச்சிகள் உடனே முடியும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பணவரவு ஓரளவு நிம்மதி தருவதாக இருந்தாலும் செலவுகள் துரத்தும். பழைய கடனை போராடி பைசல் செய்வீர்கள். கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும்.

24.02.2023 முதல் 22.04.2023 வரை இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உடல் சோர்வு, அசதி, கை, கால், மூட்டுவலி நீங்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். இடவசதியில்லாத வீட்டிலிருந்து விசாலமான வீட்டில் குடிபுகுவீர்கள். சிலர் புதிதாக வீடு, மனைவாங்குவீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சகோதரி உதவுவார். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரிகளே, முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். டிசம்பர், மார்ச் மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள்.

வராது என்றிருந்த பழைய பாக்கிகள் வந்து சேரும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். படித்த அனுபவமுள்ள வேலையாட்களை கூடுதலாக நியமிப்பீர்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரிபாகங்களால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் எதற்கெடுத்தாலும் நிலவி வந்த பிரச்சினைகள் இனி ஓயும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உத்யோகஸ்தர்களே! மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். மறைமுக எதிர்ப்புகள், வீண்பழி, வேலைச்சுமை நீங்கும். நினைத்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். இந்த குரு மாற்றம் சமூகத்தில் மதிப்பு, மரியாதை தருவதுடன் எதிர்பாராத திடீர் திருப்பங்களையும் அமைத்துத் தரும்.

பரிகாரம்: கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஹயக்ரீவரை புதன்கிழமையில் சென்று வணங்குங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோருக்கு உதவுங்கள். வளம் பெருகும்.

******

துலாம்

வெகுளித்தனமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுப்பவர்களே...!

தவறு செய்தால், தலைவனாக இருந்தாலும் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், 5-ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் சிரமப்படுத்திய குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை 6-ம் வீட்டுக்குள் ஆட்சிப் பெற்று அமர்வதால் சந்தோஷத்தையும், சங்கடங்களையும் கலந்து தருவார். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சனிபகவான் மற்றும் புதனின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் அவ்வப்போது உங்களுக்கு யோகபலன்களையும் அள்ளித் தருவார். 6-ல் குரு அமர்வதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில காரியங்களை பலமுறை அலைந்து முடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

குருபகவான் உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் இருந்த கடுமை குறையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்கள் குடும்ப விஷயத்தை வெளியாரிடம் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களை தலைநிமிரச் செய்வார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகளெல்லாம் ஓயும். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். குரு உங்களின்
10-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். அரைகுறையாக நின்று போன கட்டிடப் பணிகள் முழுமையடையும். வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக நடந்து முடியும். அலுவலக சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிடைக்கும். குரு உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவீர்கள். புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் பாக்யம் கிட்டும்.

குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:

14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் தைரிய ரோகாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பயணங்கள், சுபச் செலவுகள், அலைச்சல் என வந்து போகும். திட்டமிட்டபடி சில காரியங்களை செய்ய முடியாமல் போகும். அவ்வப்போது, வீண் அலைச்சல் வந்து போகும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடாதீர்கள். வீணாக சந்தேகப்பட்டு நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.

30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் சுக, பூர்வ புண்யாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் நிலவி வந்த பனிப்போர் மறையும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். மகளுக்கு வேலை கிடைக்கும். திருமணமும் நல்ல விதத்தில் முடியும். உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். குழந்தை பாக்யம் உண்டு. செலவுகளை ஈடுகட்ட பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். தாயாருக்கு இருந்த மூட்டுவலி, முழங்கால் வலியெல்லாம் நீங்கும். சிலருக்கு அயல்நாடு சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.

24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் பாக்ய, விரயஸ்தானாதிபதி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நினைத்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் தக்க சமயத்தில் கைக்கு வரும். கடனாக வாங்கியிருந்த தொகையைத் தந்து தீர்ப்பீர்கள். தந்தைவழியில் உதவியுண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். பழைய நண்பர்களால் ஆதாயமுண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரிகளே, தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரவேண்டிய பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, கமிஷன், ரியல் எஸ்டேட், மரவகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.
உத்யோகஸ்தர்களே, காலம்நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியது வரும். என்றாலும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் உண்டு.

இந்த குரு மாற்றம் ராகு, கேதுவின் தாக்கத்தை ஓரளவு குறைப்பதுடன், மாறுபட்ட அனுபவங்களையும், ஒரு சில வெற்றிகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் சென்று தரிசியுங்கள். பார்வையிழந்தவர்களுக்கு உதவுங்கள். பலம் கூடும்.

******
விருச்சிகம்

பணத்துக்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காதவர்களே...!

நீதி நியாயம் பற்றி பேசும் நீங்கள், அடிபட்டவர்களை அரவணைப்பவர்கள். இதுவரை 3-ம் வீட்டிலும்,4-ம் வீட்டிலும் மாறி மாறி நின்று கொஞ்சம் தடுமாற்றத்தையும், கொஞ்சம் மகிழ்ச்சியையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை 5-ம் வீட்டுக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவார்.

எதிர்பாராத திடீர் யோகங்கள் உண்டாகும். இழுத்துப் பறித்துக் கொண்டிருந்த சில காரியங்கள் உடனே முடியும். குடும்பத்தில் வீசி வந்த புயல் விலகும். உண்மையைப் பேசி பொல்லாதவர்களானீர்களே, வீட்டுக்குள் நுழைந்தாலே என்ன நடக்குமோ என்ற படபடப்பு இருந்ததே, இனி அந்த நிலையெல்லாம் மாறும். வசதி வாய்ப்புகள் இருந்தும் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று ஏங்கித் தவித்த தம்பதியருக்கு வாரிசு உருவாகும். பழைய சொத்தை விற்று புதுசு வாங்குவீர்கள். எப்பொழுது பார்த்தாலும் மாத்திரை, மருந்து என்றும் என்ன நோய் என்றே தெரியாமலும் இருந்ததே இனி அதற்கெல்லாம் விடுதலை. உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமும் கூடி வரும். பணத்தை ஏதோ ஒரு வகையில் சேமிப்பீர்கள். திடீர் பணவரவு திருப்தி தரும்.

குரு உங்கள் ராசியை பார்ப்பதால் விரக்தி, இனம்புரியாத கவலையிலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் அப்பாவுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வந்து சேரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். நாடாளுபவர்கள், சமுக அந்தஸ்துள்ளவர்கள் உதவுவார்கள். குரு பகவான் உங்களுடைய லாப வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த மனஸ் தாபங்கள் நீங்கி பாசமழை பொழிவார்கள். வாகன வசதி பெருகும். இழுபறியான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பழுதான டிவி, ஃப்ரிஜ், வாஷிங் மிஷினை மாற்றுவீர்கள். தங்க ஆபரணம், ரத்தினங்கள் சேரும். பழைய கடன் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களுடன் இணக்கமான போக்கு ஏற்படும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:

14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் தன பூர்வப் புண்யாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீண் விவாதங்கள் நீங்கும். வெகுநாட்களாக தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். சீமந்தம்,காதுகுத்து என வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிமாநில புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் தைரிய சுகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இளைய சகோதர வகையில் அடிக்கடி இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. ஆலயத்தைப் புதுப்பிக்க உதவுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் கருத்து மோதல்கள் வெடிக்கும். யாரிடமும் உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டாம். எதைப் பேசினாலும் யோசனை செய்து பேசவும்.

24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் அஷ்டம லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை முயன்று எந்த வேலையையும் முடிக்க வேண்டி வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். மூத்த அண்ணன் உதவுவார். சில நாட்களில் வருங்காலம் குறித்த கவலைகளால் தூக்கம் குறையும். வெளிநாட்டுப் பயணங்கள் தேடி வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

வியாபாரிகளே, சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதிய முதலீடுகளை போடுவதுடன் கடையை விரிவுபடுத்தி போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். வெகுநாட்களுக்குப் பிறகு பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அரிசி, எண்ணெய், மருந்து, ரசாயன வகைகள், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடனான கருத்து வேறுபாடுகள் மறையும்.

உத்யோகஸ்தர்களே, உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெகுநாட்களாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தீர்களே, உங்களைவிட தகுதி குறைந்தவர்களுக்கெல்லாம் பதவி உயர்ந்ததே, கவலை வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்தபடி பதவி உயரும். கூடவே சம்பளமும் உயரும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் அமையும். ஆகமொத்தம் இந்த குருப்பெயர்ச்சி பிரச்சினைகளால் சிதறிக் கிடந்த உங்களை சீர்செய்வதுடன், திடீர் யோகங்களையும், மனமகிழ்ச்சியையும் தருவதாக அமையும். எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும்.

பரிகாரம்: தஞ்சை மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஆபத்சகாயேஸ்வரரையும், குருபகவானையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.


No comments