Breaking News

அதிர்ச்சி! திடீரென மயங்கிய 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பொங்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் என்பவர்  பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் நிதர்சனா (12) பொங்கலூர் காட்டூர் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தார்.

காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிதர்சனா திடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்து விழுந்துள்ளார். உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் மாணவியை பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன் பாளையம் போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேர்கொண்டு வருகின்றனர்.

No comments