Breaking News

தமிழகத்தில் 8 நாட்கள் வங்கிகள் இயங்காது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!!

 

வ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வருகிறது.

அதன்படி ரிசர்வ் வங்கியின் வங்கிகளுக்கான விடுமுறை நாள் குறித்து அறிவிப்பின்படி தமிழகத்தில் ஜூன் மாதம் 8 நாட்கள் வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை என மொத்தம் எட்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்கள் வழக்கம் போல வங்கிகள் செயல்படும் என்பதால் விடுமுறையை கருத்தில் கொண்டு வங்கி சார்ந்த வேலைகளை வாடிக்கையாளர்கள் முன்னரே முடித்துக் கொள்வது நல்லது.

No comments