Breaking News

வெறும் 42 ரூபாய் முதலீட்டில் மாதம் ரூ. 1000 பென்ஷன் பெறலாம்.. வேற லெவல் திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க:

 


மத்திய அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) திட்டம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன தகுதி வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விளக்கமாக பார்ப்போம்.இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டு அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது பட்ஜெட் உரையில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்தை பயன்படுத்தி ஓய்வு காலத்தில் ஒருவர் பாதுகாப்பான வருமானத்தைப் பெற முடியும். பணியில் இருக்கும் போது பெறப்படும் வருமானத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக, ஓய்வு காலங்களைப் பாதுகாப்பாக கழிக்க முடியும்.அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம்?: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கு எந்த ஒரு இந்திய குடிமகனும் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வரை வயது வரையிலான யார் வேண்டுமானாலும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இதனை தபால் அலுவலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ சென்று இந்தத் திட்டத்தின் கணக்கினை தொடங்கலாம்.முன்பெல்லாம் அரசு பணியில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள திட்டங்களுக்கு அப்படி இல்லை. அரசு வேலைகளில் அல்லாத ஊழியர்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?: இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் இணைந்த ஒவ்வொரு நபருக்கும், அவரது முதலீட்டின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ. 1,000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ரூ.

5,000 ரூபாய் வரை மாத பென்ஷன் ஆக கிடைக்கும். கீழ்காணும் அட்டவணையைப் பார்த்தால், இது தெளிவாகப் புரியலாம்.ரூ. 1,000 பென்ஷன் பெற என்ன செய்ய வேண்டும்?: சான்றாக, உங்களுக்கு 18 வயது ஆகும்போது, நீங்கள் 60 வயது வரை சேமிக்க வேண்டும். அதாவது மீதமுள்ள 42 ஆண்டுகளுக்கு, நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.

உங்களுக்கு ரூ. 1,000 ரூபாய் பென்ஷன் ஆக கிடைக்க வேண்டும் என்றால், 42 வருடங்களுக்கு மாதம் மாதம் நீங்கள் ரூ. 42 ரூபாய் செலுத்த வேண்டும். உங்களால் மாத மாதம் செலுத்த முடியவில்லை என்றால் நீங்கள் காலாண்டுக்கு ஒரு முறை ரூ.

125 ரூபாய் செலுத்தலாம். அதற்கும் முடியாது என்றால், அரையாண்டுக்கு ஒரு முறை ரூ. 248 ரூபாய் செலுத்தினால், உங்களுடைய முதிர்வு காலத்தில் அதாவது 60-வது வயதிலிருந்து நீங்கள் மாதம் ரூ. 1,000 ரூபாய் பெற முடியும்.ரூ.

2,000 பென்ஷன் பெற என்ன செய்ய வேண்டும்?: அதுவே மாதம் ரூ. 2000 ரூபாய் பென்ஷன் பெற வேண்டும் என்று நினைத்தால், 18 வயதில் அடல் பென்ஷன் திட்டத்தை தொடங்கும் போது மாதமாதம் ரூ. 84 ரூபாய் செலுத்த வேண்டும் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தினால் ரூ. 250 ரூபாய் செலுத்த வேண்டும்.

அப்படியும் செலுத்த முடியாதவர்கள் அரையாண்டுக்கு ஒருமுறை ரூ. 496 ரூபாய் செலுத்த வேண்டும்.ரூ. 3,000 பென்ஷன் பெற என்ன செய்ய வேண்டும்?: ரூ. 3000 ரூபாய் பென்ஷன் பெற வேண்டும் என்று நினைத்தால் மாதத்திற்கு ரூ.

626 ரூபாய் செலுத்த வேண்டும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை ரூ. 376 செலுத்தலாம். அதுவே நீங்கள் அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தினால் ரூ. 744 ரூபாய் செலுத்த வேண்டும்.ரூ.

4,000 பென்ஷன் பெற என்ன செய்ய வேண்டும்?: மாதம் ரூ.4,000 ரூபாய் பென்ஷன் ஆக பெற வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் மாதத்திற்கு ரூ. 168 ரூபாய் செலுத்த வேண்டும். அதுவே காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தினால் ரூ. 501 ரூபாய் செலுத்த வேண்டும்.

அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தினால் ரூ. 991 ரூபாய் செலுத்த வேண்டும்.மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி, உங்களுடைய வயதின் அடிப்படையில் நீங்கள் பெறவிருக்கும் பென்ஷனைக் கருத்தில் கொண்டு முதலீடு செய்யலாம். இது பிற்காலத்தில், உங்களுக்கு உதவும் வகையில் இருக்கும்.

No comments