Breaking News

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்!!

 

த்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.அதன் தாக்கத்தால், மத்திய வங்கக் கடலின் கிழக்குப் பகுதியிலும், அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலிலும் 21- ம் தேதி (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக அக்டோபர் 20, 21, 24 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 22, 23, 25 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். இதைத் தொடர்ந்து 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.மழை.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், வரும் 23-ம் தேதி வங்கக்கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு கத்தாரால் முன்மொழியப்பட்ட டானா என்று பெயரிடப்பட உள்ளது.

இதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்து தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

No comments