Breaking News

இந்த தீபாவளிக்கு 7 கப் பர்ஃபி செய்யலாமா? செய்வது மிகவும் எளிது; சுவையும் அலாதியானது!

 


தீபாவளி வந்துவிட்டாலே போதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரே கொண்டாட்டம்தான். ஒருபுறம் குழந்தைகளுக்கு பட்டாசு, புத்தாடை என குதூகலம், மறுபுறத்தில் தீபாவளி பலாகாரங்கள் என கொண்டாட்டம்.

பண்டிகைகள் என்பது கொண்டாட்டங்களின் உச்சமாக தீபாவளி கொண்டாட்டம் உள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும், இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் ஒரு பெரும் பண்டிகையாக தீபாவளி உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பண்டிகை தீபாவளி. பண்டிகை கொண்டாட்டங்கள் என்றால், அனைவரும் குழந்தையாகவே மாறிவிடுகிறார்கள். அந்தளவுக்கு தீபாவளி கொண்டாட்டங்கள் இருக்கும். தீபாவளி நாளில் அனைவரும் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடைகள் உடுத்தி, மத்தாப்புக்கள் கொழுத்தி, பட்டாசுகள் வெடித்து, பலகாரங்கள் சாப்பிட்டு என நாள் முழுவதிலும் ஒரே உற்சாகமாக இருக்கும். வாழ்வில் ஆயிரம் இன்பங்கள், துன்பங்கள் இருந்தாலும், பண்டிகைகள் நம்மை மகிழ்விக்கும் மாற்றாக உள்ளன. இந்த நாளில் அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கிறோம். சொந்தங்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கிறோம். பண்டிகைகள் வாழ்வில் மகிழ்ச்சியை நிரப்புவதாக இருக்கிறது. அந்த வகையில் உங்கள் பண்டிகை நாளை மேலும் சிறப்பாக்க இந்த 7 கப் பர்ஃபியை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

நெய் - ஒரு கப்

கடலை மாவு - ஒரு கப்

பால் - ஒரு கப்

சர்க்கரை - 2 கப்

துருவிய தேங்காய் - ஒரு கப்

நட்ஸ் பொடி - ஒரு கப்

(முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்)

செய்முறை

ஒரு அகலாமான கடாயில் கடலைமாவை சேர்த்து நல்ல வாசம் வரும்வரையில் வறுத்துக்கொள்ளவேண்டும். கடலை மாவை வறுக்கும்போது மிகவும் கவனம் தேவை. ஏனெனில் அது உடனடியாக கருகிவிடக்கூடியது. எனவே மிகவும் குறைவான தீயில் வைத்து வறுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

பச்சை வாசம் போய், நல்ல வாசம் வந்தவுடன், நெய் மற்றும் பால் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவேண்டும். மாவு கட்டிப்படாமல் இருக்க தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். சிறிது நேரம் கிண்டிவிட்டு அடுத்து நட்ஸ் பொடி, துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவேண்டும். கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த கலவை கெட்டியாகத் திரண்டு வரவேண்டும்.

அதுவரை தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்கவேண்டும். கிட்டத்தட்ட அல்வா போலத்தான். இடையில் எடுத்தால் பர்ஃபி கெட்டிப்பட்டு, சரியான பதத்தில் வராது. எனவே தொடர்ந்து கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

அது கெட்டியானவுடன், ஒரு ட்ரேயில் நெய் தடவி அதில் கொட்டி, சிறிது நிமிடம் வைக்கவேண்டும். நன்றாக கெட்டியானவுடன், அதை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். இந்த பர்ஃபியை செய்வது மிகவும் சுலபம்தான், என்பதால் யார் வேண்டுமானாலும் எளிதில் செய்துவிடலாம்.

இந்த பர்ஃபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இருக்கும். ஒருமுறை ருசித்தால், தீபாவளி அல்லாத நாட்களிலே ருசித்து மகிழ்வீர்கள்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.

No comments