Breaking News

மூன்று குரங்குகளில் உங்களுக்கு எது பிடிக்கும்..? குணத்தை அறிய டெஸ்ட்

 


ற்போது ஆன்லைனில் ஆளுமைத்திறனை அறிந்துகொள்ளும் சோதனை முயற்சிகள் பல பரவி வருவதால், நம்மில் பலரும் நம்மைப் பற்றி மேலும் அறியும் தேடலில் இறங்கியுள்ளோம்.
இந்த ஆளுமை சோதனைகளின் பிரபலம் ஏதோ வதந்தி என்று நாம் ஒதுக்கி தள்ளிவிட முடியாது. ஏனெனில் அவை நமது குணாதிசயங்களைப் பற்றியும் நமக்கே தெரியாத ஆழமான இரகசிய விஷயங்களை பற்றியும் நமக்கு தெரியப்படுத்துகின்றன.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில், மக்கள் பெரும்பாலும் ஆளுமை கேள்விகளால் நிரப்பப்பட்ட கேள்வித்தாள்களையே தேர்வு செய்கிறார்கள். இங்கே நாம் கொடுத்துள்ள புகைப்பட சோதனை ஒருவரின் கற்பனை சக்தியை விரிவுப்படுத்துவதோடு அறிவியல் ரீதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் உள்ளன.

இந்தச் சோதனைகள் நம்மைப் பற்றியும், நமக்குத் தெரியாத நம் உணர்ச்சிகளைப் பற்றியும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. இந்த மூன்று குரங்கு சவால் என்பது ஒரு எளிய பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல. நீங்கள் கூச்ச சுபாவம் உடையவரா அல்லது அனைவரிடமும் எளிதில் பழகுபவரா அல்லது இரக்க குணம் படைத்தவரா என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள சவால் ரொம்பவே எளிமையானது. உங்கள் கண்களை மூடிக்கொண்டு ஆழமாக சுவாசியுங்கள். இப்போது, ​​இந்த மூன்று குரங்கில் உங்கள் உள்ளுணர்வு சொல்கிற ஒரு குரங்கைத் தேர்வுசெய்யவும். இதில் எந்த குறுக்கு வழிகளையும் பின்பற்றக் கூடாது. இந்த மூன்று குரங்குகளும் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என இப்போது பார்ப்போம்.

முதல் குரங்கு :

முதல் குரங்கு தன் காதுகளை கைகளால் மூடிக் கொண்டுள்ளது. இதை நீங்கள் தேர்வு செய்திருந்தால், நீங்கள் எளிதில் அடுத்தவர்களோடு சகஜமாக பழகுவீர்கள். இதனால் உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் அதே சமயம் நீங்கள் உங்கள் நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருப்பீர்கள்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் நன்றாக புரிந்துகொள்வீர்கள். உங்கள் சொற்களையும் செயல்களையும் மற்றவர்கள் நம்புவதால், எந்தவொரு விஷயத்திலும் அவர்கள் உங்களின் ஆலோசனையை கேட்க விரும்புவார்கள். உங்கள் நட்பு வட்டாரங்களில் நீங்கள் அமைதியைப் பேணுபவராக இருப்பீர்கள். அதோடு உங்கள் குழுவில் நீங்கள்தன் முக்கியமான நபராக இருப்பீர்கள்.

இரண்டாவது குரங்கு :

இரண்டாவது குரங்கு தன் கைகளை வைத்து கண்களை மூடிக் கொண்டுள்ளது. இதை நீங்கள் தேர்வு செய்திருந்தால், நீங்கள் ஒரு தனிமனித ஆளுமையுடன் தன்னிறைவு பெற்றவராக திகழ்வீர்கள். தனிமையில் இருப்பதுதான் உங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். மற்றவர்களிடம் உடல் ரீதியான அன்பை வெளிப்படுத்துவதில் தயக்கம் கொள்வீர்கள். தொலைவில் இருந்தபடியே மற்றவர்களை நேசிப்பதில் நீங்கள் வல்லவர். உங்களுக்கு நீங்களே சிறந்த நண்பன் என்பதால், ஒரு நாளை முழுமையடையச் செய்ய இன்னொருவரின் துணை உங்களுக்கு தேவைப்படாது.

மூன்றாவது குரங்கு :

மூன்றாவது குரங்கு மற்றவர்களிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பச்சாதாப குணத்துடன் தொடர்புடையது. இந்த குரங்கு தனது கைகளை கொண்டு வாயை மூடிக் கொண்டிருக்கிறது. இதை நீங்கள் தேர்வு செய்திருந்தால், நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா? உங்கள் இதயம் எப்போதுமே அன்பு மயமானது. இதனால் உங்கள் குழுவில் எந்த உதவியும் செய்பவராக நீங்களே இருப்பீர்கள். எல்லோருடைய அழைப்பிற்கும் உதவிக்கரம் நீட்டுவீர்கள். இந்த இயல்புக்காகவே மக்கள் உங்களை நேசிக்கவும் பாராட்டவும் செய்வார்கள்.

No comments