Breaking News

பகீர் வீடியோ... பள்ளி வகுப்பறையில் தூங்கும் ஆசிரியை... காத்து விசிறி விடும் மாணவர்கள்!

 


ரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் மாணவர்களின் எதிர்காலம் பற்றிய அக்கறையின்றி அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது என்பதை பொறுப்பு உணர்வதே இல்லை. தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இது போன்ற சில ஆசிரியர்களால் அவை பாழடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் தானிப்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் நடந்த சம்பவம் குறித்த ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் பாய் விரித்து படுத்து தூங்குகிறார். அவருக்கு அங்குள்ள குழந்தைகள் ஒருவருக்கு பின் ஒருவராக மாறி மாறி விசிறி விடுகிறார்கள்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது விசாரணை நடத்தப்படும் என கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணைகள் முடிவடைந்த பிறகு அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

 

No comments