Breaking News

விஷமாக மாறிய 'கேக்' 5 வயது சிறுவன் பலி

 


கே.பி.அக்ரஹாரா: கர்நாடகாவில் விஷமாக மாறிய 'கேக்'கை சாப்பிட்ட 5 வயது சிறுவன் பலியானான்; தந்தை, தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி., அக்ரஹாரா புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ்.
இவரது மனைவி நாகலட்சுமி. இந்த தம்பதியின் மகன் தீரஜ், 5. 'ஸ்விக்கி'யில் உணவு விற்பனை பிரதிநிதியாக பால்ராஜ் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு யாரோ ஒருவர், ஸ்விக்கி மூலம் பேக்கரியில் கேக் ஆர்டர் செய்திருந்தார்.

பேக்கரிக்கு சென்று பால்ராஜ் கேக் வாங்கினார்.கேக் ஆர்டர் செய்தவர், திடீரென ஆர்டரை ரத்து செய்தார். இதனால், பேக்கரியில் வாங்கிய கேக்கை, பால்ராஜ் வீட்டிற்கு எடுத்துச் சென்றார்; மகன், மனைவியுடன் சேர்ந்து சாப்பிட்டார்.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, மூன்று பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் தீரஜ் இறந்துவிட்டார். பால்ராஜ், நாகலட்சுமி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.விஷமாக மாறிய கேக்கை சாப்பிட்டதால் தீரஜ் இறந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 'பால்ராஜ் சுயநினைவுக்கு வந்தால் தான், அவர் எங்கிருந்து கேக் வாங்கி வந்தார் என்பது தெரியவரும்' என, கே.பி., அக்ரஹாரா போலீசார் தெரிவித்தனர்.

No comments